IPL 2024 முழு வீச்சில் நடந்துவரும் இந்த சூழ்நிலையில், சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) இடையே விறுவிறுப்பான போட்டி நடந்தது. IPL உற்சாகமாக ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், இந்த போட்டிக்கான டிக்கெட் வாங்குவதற்கு முயற்சி செய்த பெங்களூருவை சேர்ந்த நபர் ஒருவர் 3 லட்ச ரூபாயை இழந்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு கொண்ட RCB vs CSK போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்கான முயற்சியில் பாதிக்கப்பட்டவர் மே 10 முதல் 11 வரை முயற்சி செய்துள்ளார். இதன் காரணமாக அவரால் அதிகாரப்பூர்வ சேனல்களிடமிருந்து டிக்கெட்டுகளை பெற முடியவில்லை. இதனால் இவர் பிளாக் மார்க்கெட் சந்தையை அணுகியுள்ளார்.
‘ipl_2024_tickets__24’ என்ற ஒரு விளம்பரத்தை பாதிக்கப்பட்டவர் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில் பார்த்துள்ளார். பத்மா சின்கா விஜயகுமார் என்ற இந்த விளம்பரத்தை வெளியிட்டவர் தன்னிடம் RCB vs CSK போட்டிக்கான டிக்கெட்டுகள் இருப்பதாக கூறியுள்ளார். IPL டிக்கெட்டுகளை விற்பனை செய்வதற்கான அதிகாரப்பூர்வ உரிமையை தான் கொண்டிருப்பதாக இவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்டவரிடம் தன்னுடைய ஆதார் அட்டையின் போட்டோவையும், மொபைல் நம்பரையும் வழங்கியுள்ளார். பேமெண்ட் செலுத்திய பிறகு டிக்கெட்டுகளை வழங்குவதாக பாதிக்கப்பட்டவருக்கு உறுதி அளித்துள்ளார். இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர் மூன்று டிக்கெட்டுகளுக்கான விலையாக 7,900 ரூபாயை ட்ரான்ஸ்ஃபர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு எந்த ஒரு இ-டிக்கெட்டுகளும் வழங்கப்படவில்லை.
பாதிக்கப்பட்டவர் இது குறித்து மோசடிக்காரரிடம் கேட்டபோது, ஏதோ தொழில்நுட்ப கோளாறு நடந்ததாகவும் மேலும் 67,000 ரூபாய் கூடுதல் தொகையை ட்ரான்ஸ்ஃபர் செய்யுமாறும் கேட்டுள்ளார். குமாரின் வாக்குறுதிகளை நம்பி பாதிக்கப்பட்டவர் மீண்டும் பணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்துள்ளார். மொத்தமாக மூன்று லட்ச ரூபாய் பணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்த பிறகும் எந்த ஒரு டிக்கெட்டுகளையும் பாதிக்கப்பட்டவர் பெறவில்லை. இந்த கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டிருப்பதை அறிந்து காவல்துறையின் உதவியை நாடியுள்ளார்.
IPL டிக்கெட்டுகள் பெறுவதில் அதிக டிமாண்ட் இருப்பதால் ஏராளமான மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். எனவே வரக்கூடிய IPL போட்டிகளுக்கு டிக்கெட்டுகளை வாங்கும்போது நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய குறிப்புகள் சிலவற்றை பார்க்கலாம்.
இதையும் படிக்க:
**‘**கொல்கத்தா அணி இன்னும் 3 கோப்பைகளை வெல்ல வேண்டும்’ – கவுதம் காம்பீர் விருப்பம்…
அதிகாரப்பூர்வ மூலங்களிலிருந்து வாங்கவும்:
எப்பொழுதும் IPL டிக்கெட்டுகளை அதிகாரப்பூர்வ வெப்சைட்டுகள் அல்லது செல்லர்களிடமிருந்து வாங்கவும்.
விற்பனையாளரை வெரிஃபை செய்யவும்:
ஒருவேளை நீங்கள் மூன்றாம் பார்ட்டியிடம் டிக்கெட் வாங்குகிறீர்கள் என்றால் அவரது நம்பகத்தன்மையை சோதித்து பார்க்கவும். அந்த செல்லர் குறித்த ரிவ்யூக்கள், ரேட்டிங் மற்றும் பின்னணி விவரங்களை சோதித்துப் பாருங்கள்.
முன்பணம் செலுத்துவதை தவிர்க்கவும்:
முழு பேமெண்டை முன்பணமாக செலுத்த சொல்லும் செல்லர்களிடமிருந்து நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாங்கும் நபர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் கிரெடிட் கார்டுகள் அல்லது நம்பகமான பேமெண்ட் சேவைகளை பயன்படுத்தவும்.
சிவப்பு கொடிகள் இருக்கிறதா என்பதை சரிபார்க்கவும்:
தனிநபர் அடையாள ஆவணங்களை வழங்கும் செல்லர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கவும். ஏனெனில் இதுபோன்ற போலி ஆவணங்கள் வழங்குவது மிகவும் எளிது.
சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள் குறித்து உடனடியாக புகார் அளிக்கவும்:
ஏதேனும் மோசடி சம்பவத்தில் நீங்கள் சிக்கிக் கொண்டால், உடனடியாக அது குறித்து காவல்துறை மற்றும் சம்மந்தப்பட்ட தளத்தில் புகார் அளிக்கவும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)