இலங்கைத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் திருகோணமலை மாவட்டத்தின் எல்லைக் கிராமமான வெருகல் இருவேறு வரலாற்றுக் காலங்களின் சாட்சியாக இருக்கின்றது.
ஒன்று தமிழ் மக்களின் கூட்டுப்படுகொலையின் சின்னம். மற்றொன்று போராட்ட கட்டமைப்பை சிதைக்க முயன்ற துரோகத்தின் விளைநிலமாக மாற்றப்பட்டிருந்தது.
1986 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 12 ஆம் திகதி நிகழ்ந்த உண்மையான வெருகல் படுகொலையின் 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
அதேநேரம் 18 ஆணடுகள் கழித்து 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அதே வெருகல் ஆற்றங்கரை பிரதேசத்தை கருணா தனது துரோகத்தின் பலிக்களமாக்கினார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்த விநாயகமூரத்தி முரளிதரன் (கருணா) துரோகப் பிழவை செய்திருந்தார்.
தனது தனிப்பட்ட அதிகார ஆசைக்காகவும் இலங்கை அரசின் உளவுத்துறை மற்றும் சர்வதேச சக்திகளின் பின்னணி தூண்டுதலினாலும் வன்னி பாரபட்சம் என்ற போலி பிராந்தியவாத்தை கையில் எடுத்து பிரிவினையை அறிவித்தார்.
கருணாவின் சூழ்ச்சியை அறியாத ஆயிரக்கணக்கான இளம் போராளிகளை தவறாக வழிநடத்தினார்.
சில நாட்களில் கருணாவின் கட்டமைப்பு சிதறியது.
தனது சுயநலத்திற்காக பேராளிகளை போர்க்களத்தில் கைவிட்டு கருணா கொழும்பிற்கு தப்பியோடி இலங்கை அரசின் பாதுகாப்பு வளையத்திற்குள் தஞ்சமடைந்தார்.
இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க…
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! . |

