லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹென்லி & பார்ட்னர்ஸ் என்ற அமைப்பு உலகம் முழுவதும் கோடீஸ்வரர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களை ஆண்டுதோறும் பட்டியலிட்டு வருகிறது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான பட்டியலில், அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
நியூயார்க் நகரத்தில் உலகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், 3 லட்சத்து 50 ஆயிரம் கோடீஸ்வரர்கள் வசித்து வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட, தற்போது இங்கு வசிக்கும் 24 பேரில் ஒருவர் கோடீஸ்வரராக இருப்பதாக, அந்த நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் வசிக்கும் 60 கோடீஸ்வரர்களும், பிற 744 பேரும், இந்திய மதிப்பில் ஒவ்வொருவரும் சுமார் ரூ.800 கோடி மதிப்பிலான சொத்துகளை வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இரண்டாவது இடத்தில் சன் ஜோஸை உள்ளடக்கிய சான் பிரான்சிஸ்கோவும், ஜப்பானின் டோக்கியோ 3வது இடத்தையும் பிடித்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் புலம்பெயர்ந்த கோடீஸ்வரர்களின் வருகையால், சிங்கப்பூர் 4வது இடத்தைப் பிடித்துள்ளது. இருப்பினும், சில முக்கிய நகரங்கள், தங்களது வழக்கமான இடங்களை பறிகொடுத்துள்ளன.
Also Read :
உலகில் நதியே இல்லாத நாடு எது தெரியுமா? 90% பேருக்கு இது தெரியாது!
குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் லண்டன் நகரம் பெரும் சரிவை சந்தித்துள்ளன. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியது ஒரு காரணமாக இருந்தாலும், பெரும்பாலான பணக்காரர்களும் அங்கிருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. அதேபோல், சீனாவின் ஹாங்காங் நகரமும் 4% அளவிலான கோடீஸ்வரர்களை இழந்துள்ளது.
இருப்பினும், சீனாவின் ஷென்சென் உள்ளிட்ட சில நகரங்கள் இந்த பட்டியலில் புதிதாக இணைந்துள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை, வணிக தலைநகரான மும்பை இந்த பட்டியலில் படுபாதாளத்திற்கு சென்றுள்ள நிலையில், 140% அளவுக்கு கோடீஸ்வரர்களின் வளர்ச்சியால், பெங்களூரு நகரம் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அதேபோல, ஹோஷிமின், வியட்நாம், ஸ்காட்ஸ்டேல், அரிசோனா உள்ளிட்ட நகரங்களும் இப்பட்டியலில் உள்ளன. மத்தியக் கிழக்கு நாடுகளில் துபாய் நகரம்தான் 21ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
