தொடருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக இலங்கை தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிலாபத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த தொடருந்துடன் முச்சக்கரவண்டி மோதியதில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
குறித்த விபத்து சம்பவம் இன்று (09) காலை இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
கப்புவத்தை மற்றும் கந்தானை ஆகிய நிலையங்களுக்கு இடைப்பட்ட தொடருந்து குறுக்கு வழியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

