• Login
Monday, June 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

12 ஆண்டுகால மோடி அரசு: 5 சிறப்புப் புத்தகங்களுடன் நாடு தழுவிய பிரம்மாண்ட பிரச்சாரத்தைத் தொடங்குகிறது பா.ஜ.க! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 8, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
12 ஆண்டுகால மோடி அரசு: 5 சிறப்புப் புத்தகங்களுடன் நாடு தழுவிய பிரம்மாண்ட பிரச்சாரத்தைத் தொடங்குகிறது பா.ஜ.க! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 08, 2026 12:26 PM IST

மோடி அரசின் சாதனைகளை ஐந்து முக்கியத் தலைப்புகளில் விரிவாக விளக்கும் பிரத்யேக புத்தகத் தொகுப்புகள் இந்தி, ஆங்கிலம், உருது உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் வெளியிடப்பட உள்ளன.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தனது 12 ஆண்டுகால ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதை ஒட்டி, பா.ஜ.க நாடு தழுவிய அளவில் ஒரு பிரம்மாண்ட மக்கள் தொடர்பு பிரச்சாரத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இந்த இயக்கம், ’12 ஆண்டுகள்: நம்பிக்கை, வளர்ச்சி மற்றும் மக்கள் நலன்’ என்ற முழக்கத்தின் கீழ், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அரசு செயல்படுத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க கொள்கை முடிவுகள், நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு சாதனைகளைப் பொதுமக்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக, மோடி அரசின் சாதனைகளை ஐந்து முக்கியத் தலைப்புகளில் விரிவாக விளக்கும் பிரத்யேக புத்தகத் தொகுப்புகள் இந்தி, ஆங்கிலம், உருது உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் வெளியிடப்பட உள்ளன.

இந்தத் தொகுப்பின் முதல் புத்தகமான ‘ராஷ்ட்ர பிரதம’ (தேசம் முதலிடம்) என்பது, தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த கடந்த 12 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவுகள், ராணுவத்தின் உத்திசார் திறன்கள் மற்றும் சர்ஜிக்கல் ஸ்டிரைக், ஆபரேஷன் சிந்தூர் போன்ற முக்கிய ராணுவ வெற்றிகளைப் பேசுகிறது.

இரண்டாவது புத்தகமான ‘ஜன் சேவா கா சங்கல்ப்’ (மக்கள் சேவைக்கான அர்ப்பணிப்பு), சமூகத்தின் விளிம்புநிலை மற்றும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கொண்டுவரப்பட்ட சமூக நலத்திட்டங்களை விரிவாகப் பட்டியலிடுகிறது.

பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம் மற்றும் சுயசார்பை மையமாகக் கொண்ட திட்டங்கள் ‘சஷக்திகரன் சே சம்ரித்தி தக்’ (அதிகாரமளித்தலில் இருந்து வளம் நோக்கி) என்ற மூன்றாவது புத்தகத்திலும், நாட்டின் அதிவேக நவீனமயமாக்கலோடு இந்தியாவின் தொன்மையான கலாச்சாரப் பாரம்பரியத்தையும் சமநிலையாகப் பேணுவது குறித்த விவரங்கள் ‘விராஸத் பி, விகாஸ் பி’ (பாரம்பரியத்துடன் கூடிய வளர்ச்சி) என்ற நான்காவது புத்தகத்திலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

இறுதிப் புத்தகமான ‘ராஷ்ட்ர நிர்மாண்’ (தேசக் கட்டமைப்பு), இந்தியாவின் உள்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு உயர்த்த பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட பிரம்மாண்ட திட்டங்களை முழுமையாக விவரிக்கிறது.

இந்த மக்கள் தொடர்பு பிரச்சாரத்தின் மூலம் பா.ஜ.க தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் நாடு முழுவதும் உள்ள மக்களை நேரடியாகச் சந்தித்து அரசின் சாதனைகளை விளக்கவுள்ளனர்.

இதன் மிக முக்கிய வரலாற்று மைல்கல்லாக, பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து அதிக நாட்கள் பிரதமராகப் பதவி வகித்த நேருவின் சாதனையை முறியடிக்கும் தினமான ஜூன் 10, 2026 அன்று, டெல்லியில் ஒரு மாபெரும் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய மத்திய அமைச்சர்களுடன், நாடு முழுவதிலும் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) மாநில முதலமைச்சர்களும், துணை முதலமைச்சர்களும் டெல்லியில் ஒன்றுகூட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First Published :

Jun 08, 2026 12:26 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

12 ஆண்டுகால மோடி அரசு: 5 சிறப்புப் புத்தகங்களுடன் நாடு தழுவிய பிரம்மாண்ட பிரச்சாரத்தைத் தொடங்குகிறது பா.ஜ.க!

Read More

Previous Post

சர்வதேச குற்ற கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்ட மூன்று யாழ். இளைஞர்கள் மீட்பு

Next Post

ரயிலில் பொதுப் பெட்டியில் பயணிப்பவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மத்திய அரசு முக்கிய முடிவு!

Next Post
ரயிலில் பொதுப் பெட்டியில் பயணிப்பவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மத்திய அரசு முக்கிய முடிவு!

ரயிலில் பொதுப் பெட்டியில் பயணிப்பவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மத்திய அரசு முக்கிய முடிவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin