• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கேங்ஸ்டர் சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை!

GenevaTimes by GenevaTimes
May 30, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
கேங்ஸ்டர் சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹோட்டல் அதிபர் ஜெயா ஷெட்டி கொலை வழக்கில் கேங்ஸ்டர் சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மத்திய மும்பை, காம்தேவி பகுதியிலுள்ள கோல்டன் கிரௌன் ஹோட்டலின் அதிபரான ஜெயா ஷெட்டியை மே. 4 2001-ம் ஆண்டு அதே ஹோட்டலில் வைத்து சோட்டா ராஜனின் ஆட்கள் இருவர் சுட்டுக் கொன்றனர்.

இந்தக் கொலை வழக்கில் ஹோட்டல் மேலாளர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையில், சோட்டா ராஜன் குழுவைச் சேர்ந்த ஹேமந்த் புஜாரி என்பவர் ஜெயா ஷெட்டியிடம் பணம் கேட்டுத் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாகவும், பணம் தர மறுத்ததால் கொலை செய்ததாகவும் தெரிய வந்துள்ளது.

கலவரம், அடிதடி – முன்னாள் பாஜக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு!

பல்வேறு கொலை, கொலை மிரட்டல், மிரட்டி பணம் பறித்தல் தொடர்பான வழக்குகள் சோட்டா ராஜன் மீது பதியப்பட்டுள்ளதால் இந்த வழக்கில் அவர் மீதும், மற்ற குற்றவாளிகள் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, இன்று சிறப்பு நீதிமன்றத்தின் கீழ் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் நீதிபதி ஏ.எம்.பாட்டீல், சோட்டா ராஜனை குற்றவாளி என்று தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.

வழக்கு குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்த வழக்கின் இதற்கு முன்பான விசாரணைகளில் 3 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார்.

பத்திரிகையாளர் ஜே டே 2011-ல் கொல்லப்பட்ட வழக்கில் சோட்ட ராஜன் ஆயுள் தண்டனைக் கைதியாக ஏற்கனவே திகார் சிறையில் தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

பல்கலைக்கழக ஊழியர்களை பணிக்குத் திரும்ப பணிப்பு

Next Post

ஐசிசி தரவரிசை பட்டியல்: டி20 போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து முதலிடம்…

Next Post
ஐசிசி தரவரிசை பட்டியல்: டி20 போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து முதலிடம்…

ஐசிசி தரவரிசை பட்டியல்: டி20 போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து முதலிடம்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin