இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஹாசன் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவை விமான நிலையத்தில் கைது செய்ய வலியுறுத்தி ஹாசனில் இன்று(மே 30) மாபெரும் பேரணி நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவர்களில் ஒருவரான சுபாஷினி அலி பேசுகையில், “பாலியல் ஒடுக்குமுறையைக் கண்டிக்கவும், துன்பப்படும் பெண்களுக்கு தைரியம் கொடுக்கவும் நாம் அனைவரும் இன்று இங்கு இருக்கிறோம். பணம் மற்றும் அதிகாரத்தின் கொடுங்கோன்மை இனி நடக்காது. இதுபோன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாதுகாக்கப்பட்டால், மத்திய அரசை வேரோடு பிடுங்கி எறிவோம்” என்று கூறினார்.

