Last Updated:
கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் மோடி முன்னெடுத்த ‘மக்கள் பங்கேற்பு’ இயக்கம் குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் பார்ப்போம்.
ஜூன் 10-ம் தேதியுடன் இந்தியாவில் அதிக நாட்கள் ஆட்சியில் இருந்த பிரதமர் என்ற சாதனையை படைக்க இருக்கிறார் பிரதமர் மோடி. இதன் மூலம் அவர் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை முறியடிக்க இருக்கிறார். இந்த நிலையில், மோடி முன்னெடுத்த ‘மக்கள் பங்கேற்பு’ இயக்கம் குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் பார்ப்போம்.
பிரதமர் நேருவை பொறுத்தவரை சுதந்திர இந்தியாவில் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல அவர் பெரும்பாலும் நம்பியிருந்தது நிறுவனங்களையும், அதிகார வர்க்கத்தையும் தான். அதன் வழியே பல்வேறு திட்டங்களை செயலாற்றினார் நேரு. பிரதமர் மோடியை பொறுத்தவரை 12 ஆண்டுகள் ‘மக்கள் பங்கேற்பு’ திட்டங்கள் மூலம் தனித்துவ சாதனையை படைத்து கவனம் ஈர்த்துள்ளார்.
உதாரணமாக ‘தூய்மை இந்தியா’, ‘டிஜிட்டல் பண பரிவர்த்தனை’, ‘தடுப்பூசி இயக்கம்’ போன்ற அரசின் கொள்கை முடிவுகளை மக்கள் இயக்கம் மூலமாக முன்னெடுத்தது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அனைத்து திட்டங்களிலும் மக்கள் பங்கேற்பை உறுதி செய்தார் மோடி. அனைவரின் பங்களிப்பும் அதில் இடம்பெறும் வகையில் திட்டமிட்டது முக்கியத்துவமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. நேருவை பொறுத்தவரை, வளர்ச்சி என்பது அரசின் பொறுப்பாக கருதப்பட்டது.
பிரதமர் மோடிக்கு வேறொரு மிகப்பெரிய சவால் இருந்தது. 140 கோடி மக்கள் இருக்கும் ஜனநாயக நாட்டில் சுகாதாரம், டிஜிட்டல் மயமாக்கல், நீர் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களை எவ்வளவு பெரிய அரசாக இருந்தாலும் சமாளிக்க முடியாத நிலையில், பிரதமர் மோடி அரசு முக்கியமான விஷயத்தை கையிலெடுத்தது.
அதாவது பொதுமக்களை வெறும் பயனாளிகளாக மட்டும் முன்னிறுந்தாமல், அவர்களையும் பங்கேற்பாளராக மாற்றுவதன் மூலம் அரசின் செயல்திட்டங்களை எளிதாக செயல்படுத்தி சாதிக்க முடியும் என நம்பினார் மோடி. அதை செய்தும் காட்டினார்.
‘வளர்ச்சி என்பது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல’ என்பதை தன்னுடைய சுதந்திர தின உரைகளிலும், ‘மன் கி பாத்’ உரைகளிலும் தொடர்ச்சியாக பேசி வந்தார் மோடி. கடந்த 2022-ம் ஆண்டு தனது சுதந்திர தின உரையில் பேசிய மோடி, “அரசு சார்ந்த வளர்ச்சி’யிலிருந்து ‘குடிமக்கள் சார்ந்த வளர்ச்சிக்கு’ மாற வேண்டும்” என அழைப்பு விடுத்தார்.
‘மக்கள் பங்கேற்பு’, ‘குடிமக்களுடன் கூடிய வளர்ச்சி’ போன்ற பதங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஒலித்துக்கொண்டே இருந்தன. இந்தக் கருத்தானது, குடிமக்களை அரசாங்கத் திட்டங்களின் பயனாளிகளாக மட்டும் கருதாமல், தேசியப் பணிகளில் தீவிரப் பங்கேற்பாளர்களாக நிலைநிறுத்த முயன்றது. இதன் மூலம் கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் மோடி முன்னெடுத்த ‘மக்கள் பங்கேற்பு’ சார்ந்த விஷயங்கள் வரலாற்றில் முக்கியமான விஷயமாக முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.
PM Modi | ‘ஸ்வச் பாரத்’ முதல் ‘டிஜிட்டல் இந்தியா’ வரை… மக்கள் பங்கேற்புடன் பிரதமர் மோடி முன்னெடுத்த திட்டங்கள்!

