இருப்பினும், நிறுவனத்தின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் மிக முக்கியமான உயர்மட்ட முடிவுகளை எடுக்கும்போது (High-Stakes Decision Making), மனிதர்களுக்கு உள்ள மாற்று இல்லாத மூன்று முக்கியத் திறன்களை AI-ஆல் ஒருபோதும் ஈடு செய்ய முடியாது என்று மெல்போர்ன் மற்றும் அமெரிக்க சட்ட நிபுணரான ஷாய் ஜமானியன் (Shai Zamanian) தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். அதன் விபரம் பின்வருமாறு
AI தொழில்நுட்பமானது தனக்குக் கொடுக்கப்படும் தரவுகளின் அடிப்படையில் வடிவங்களையும் (Pattern Recognition), சாத்தியக்கூறுகளையும் மிக அதிவேகமாகக் கண்டறியும். ஆனால், இதனால் மனிதர்களைப் போலச் சூழ்நிலைக்கு ஏற்பப் பகுத்தறிந்து முடிவெடுக்க முடியாது.
உதாரணமாக, அரசியல் ஸ்திரத்தன்மையற்ற ஒரு புதிய நாட்டில் முதலீடு செய்ய ஒரு நிறுவனம் முடிவெடுக்கும் போது, AI வெறும் வர்த்தகத் தரவுகளை மட்டுமே கணக்கிடும். ஆனால், அங்குள்ள அரசாங்க அதிகாரிகளின் மனநிலை, கூட்டாளிகளின் நம்பகத்தன்மை மற்றும் நெறிமுறை சார்ந்த நுணுக்கங்களை மனிதர்களால் மட்டுமே உணர்ந்து மதிப்பிட முடியும். அத்துடன், வெவ்வேறு AI மாதிரிகள் வெவ்வேறு ஆலோசனைகளை வழங்கக்கூடும் என்பதால், இறுதி முடிவை எடுக்க மனிதத் தலையீடு இன்றியமையாதது.
வணிகத்தின் அடிப்படைத் தூணே மனிதர்களுக்கு இடையேயான பரஸ்பர உறவுகளும் நம்பிக்கையும்தான். ஒரு பெரிய ஒப்பந்தத்தை முடிப்பதற்கோ அல்லது நெருக்கடியான காலங்களை மேலாண்மை செய்வதற்கோ தொழில்நுட்பத் திறனை விட மனிதப் பிணைப்பே முக்கியத்துவம் பெறுகிறது.
சர்வதேச முதலீட்டாளர்களுடன் பணிபுரியும் போது நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் இக்கட்டான சூழலில் உடன் நிற்பதன் மூலமே உண்மையான நம்பிக்கையை உருவாக்க முடியும்; இதை எந்தவொரு அல்காரிதம்களாலும் செய்ய முடியாது. மேலும், AI சில நேரங்களில் தவறான தகவல்களைத் தரும் ‘ஹலூசினேஷன்’ (Hallucination) சிக்கல்களைக் கொண்டிருப்பதால், வணிக உறவுகளில் அதை முழுமையாக நம்ப முடியாது.
நிறுவனங்கள் தங்களின் மென்பொருள்களை மேம்படுத்துவதை விட, அனுபவம் வாய்ந்த தலைவர்களுக்கு அதிக ஊதியம் வழங்குவதற்குக் காரணம் இந்த அனுபவ அறிவுதான். AI கோடிக்கணக்கான தரவுகளைப் படித்திருக்கலாம், ஆனால் ஒரு தவறான முடிவால் பணியாளர்கள் வேலை இழக்கும் போதோ அல்லது நெருக்கடி நேரத்தில் நிர்வாகக் குழு பதில் கேட்கும் போதோ ஏற்படும் உண்மையான மன அழுத்தத்தையும், அதன் மூலம் கிடைக்கும் பாடங்களையும் அது உணர்ந்ததில்லை. தவறுகளின் விளைவுகளைச் சந்திக்காத AI-ஆல், மனிதர்களின் வாழ்வியல் அனுபவ அறிவுக்கு இணையாக வர முடியாது.
டெலாய்ட் (Deloitte) நிறுவனத்தின் 2026-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, பெரும்பாலான தலைவர்கள் தங்களின் மூலோபாய வழிகாட்டுதலுக்கு இன்னமும் மனித நிபுணத்துவத்தையே நம்பியிருக்கிறார்கள். ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் பேராசிரியர்கள் குறிப்பிடுவது போல, “AI நமக்கு வேகத்தையும் அளவையும் தரலாம், ஆனால் மனிதர்கள் மட்டுமே பகுத்தறிவு, நெறிமுறைகள் மற்றும் அனுபவத்தை வழங்க முடியும்”. எனவே, வணிகத் தலைவர்கள் AI-ஐ ஒரு துணைக் கருவியாகப் பயன்படுத்தலாமே தவிர, தங்களின் தனித்துவமான மனிதப் பண்புகளுக்கு மாற்றாகக் கருதக் கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

