தெரிவு செய்யப்பட்ட பின்னர் அரசியல் கட்சிகளை மாற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தை விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கிறது என அமைச்சரவைப் பேச்சாளர் மருத்துவர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சர், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆளும் கட்சிக்குள் கொண்டுவர அரசாங்கத்திற்கு எந்தத் திட்டமும் இல்லை என்று குறிப்பிட்டார்.
மக்கள் ஆணையைப் பாதுகாக்க இந்தச் சட்டம்
தேர்தல்களில் வழங்கப்படும் மக்கள் ஆணையைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டதே முன்மொழியப்பட்ட இந்தச் சட்டம் என்றும் அவர் மேலும் கூறினார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

