இறுதிக்கட்ட தோ்தல் பிரசாரம் வியாழக்கிழமையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், பிரதமா் மோடி மூன்று நாள் பயணமாக தமிழகத்துக்கு வியாழக்கிழமை வருகிறாா். கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா் நினைவு மண்டபத்தில் இருநாள்கள் தங்கியிருந்து, பிரதமா் தனிமையில் தியானம் மேற்கொள்கிறாா்.

