ஆதார் எண்ணுடன், பான் எண்ணை இணைப்பதற்கான அவகாசத்தை மே 31ஆம் தேதி வரை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.
வருமான வரி செலுத்துவோரின் முக்கிய ஆவணங்களில் ஒன்றான பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயம் என வலியுறுத்தி வரும் மத்திய அரசு, அதற்கான அவகாசத்தை பலமுறை நீட்டித்தது. இறுதியாக, கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதன்பிறகு, ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கு தாமத கட்டணமாக ரூ.1,000 வசூலிக்கப்பட்டது. அத்துடன், ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் செயலற்றதாகி விடும் என வருமான வரித்துறையும் எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், வருமான வரித்துறை மீண்டும் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள வருமான வரித்துறை, வருமான வரி செலுத்துவோர், தங்களின் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை மே 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இல்லாவிட்டால், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஜூன் 31ஆம் தேதி கடைசி நாள் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க:
UAN : யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பரை ஆன்லைனில் ஆக்டிவேட் செய்வது எப்படி?
எனவே, அதிகளவு வரிப் பிடித்தத்தை தவிர்க்க, மே 31ஆம் தேதிக்குள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்றும் வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, மே 31ஆம் தேதிக்குள் பான் – ஆதார் இணைப்பு செய்யாவிட்டால், டிடிஎஸ் இருமடங்காக பிடித்தம் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
