• Login
Wednesday, May 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

12 இலட்சத்தில் விட்ஸ் கார் கனவை நனவாக்குங்கள்! அரசாங்கத்துக்கு சஜித் சவால் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
May 20, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
12 இலட்சத்தில் விட்ஸ் கார் கனவை நனவாக்குங்கள்! அரசாங்கத்துக்கு சஜித் சவால் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
12 இலட்சத்தில் விட்ஸ் கார் கனவை நனவாக்குங்கள்! அரசாங்கத்துக்கு சஜித் சவால்

எரிபொருள், மின்சாரக் கட்டணங்களைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதோடு, தேர்தல் வாக்குறுதியின்படி 12 இலட்சம் ரூபாவில் விட்ஸ் கார் வாங்கும் கனவை நனவாக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்குச் சவால் விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்திற்கு முக்கியமான இரண்டு சவால்களை முன்வைத்துள்ளார். முதலாவதாக, எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும், இரண்டாவதாக, தேர்தல் வாக்குறுதியின்படி 12 இலட்சம் ரூபாவிற்கு விட்ஸ் (Vitz) ரக காரை வாங்கும் மக்களின் கனவை நனவாக்குமாறும் அவர் அரசாங்கத்திற்குச் சவால் விடுத்துள்ளார்.

நேற்று (19) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்தக் கேள்விகளை எழுப்பினார். ஜனாதிபதி மற்றும் ஆளுந்தரப்பு அமைச்சர்கள் நாட்டில் முதன்மை உபரி இருப்பதாகவும், அரச வருவாய் அதிகரித்துத் திறைசேரி நிரம்பி வழிவதாகவும், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து பெரும் நிதியுதவிகள் கிடைக்கவுள்ளதாகவும் கூறிவரும் நிலையில், மீண்டும் எரிபொருள் விலையை அதிகரிக்க நேரிடும் என ஜனாதிபதி குறிப்பிடுவது ஏன் என்று சஜித் கேள்வி எழுப்பினார்.

திறைசேரி நிரம்பி வழிந்தால், அந்த நிதியைக் கொண்டு எரிபொருள் விலை உயர்வைத் தடுத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாதா என்றும் அவர் வினவினார். மேலும், கடந்த தேர்தலில் தற்போதைய ஆளுந்தரப்பினர் 12 இலட்சம் ரூபாவுக்கு விட்ஸ் கார் வாங்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக வாக்குறுதி அளித்திருந்ததை நினைவுபடுத்தி, நடுத்தர மக்களின் வாகனக் கனவை அரசாங்கம் எப்போது நனவாக்கப் போகிறது என்றும் சஜித் கேட்டார்.

ஒரு நபர் மாதம் 16,690 ரூபாவில் வாழ முடியும் என அரசாங்கம் கூறுவதைக் கடுமையாக விமர்சித்த அவர், தற்போதைய வாழ்க்கைச் செலவில் அந்தத் தொகையில் வாழ்வது சாத்தியமில்லை என்றும், தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் வறுமைக் கோடு கணக்கீடு முற்றிலும் தவறானது என்றும் தெரிவித்தார். எனவே, அத்திணைக்கள அதிகாரிகளை பாராளுமன்றத்திற்கு அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Read More

Previous Post

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேலும் 3 சீனர்கள் கைது: 51 லட்சம் பெறுமதியான கைபேசிகள் பறிமுதல் – Sri Lanka Tamil News

Next Post

தேர்தல் ஆணையம் தகவல் – Malaysiakini

Next Post

தேர்தல் ஆணையம் தகவல் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin