ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம், ஈரானிய நாணய மாற்று நிறுவனம் (Foreign currency exchange house) ஒன்றிற்கும் ஈரானிய வங்கிகளின் சார்பில் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வந்த போலி நிறுவனங்களுக்கும் (Front companies) எதிராகப் புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க நிதித்துறை (US Treasury Department) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
ஈரானைத் தளமாகக் கொண்டு இயங்கும் அமீன் எக்ஸ்சேஞ்ச் (Amin Exchange – இது Ebrahimi and Associates Partnership Company என்றும் அழைக்கப்படுகிறது) என்ற நிறுவனத்திற்கு எதிராகவே இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஈரானிய அரசு
இந்த நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகம் (UAE), துருக்கி மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட பல நாடுகளின் எல்லைகளுக்குள் பரந்து விரிந்த போலி நிறுவனங்களின் வலையமைப்பைக் கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இவற்றுடன், வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு ஈரானிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருட்களைக் கொண்டு செல்வதில் ஈடுபட்டிருந்த 19 கப்பல்களின் போக்குவரத்தையும் அமெரிக்கா முடக்கியுள்ளது.
ஈரானிய நாணய மாற்று நிறுவனங்கள் ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான டொலர் மதிப்பிலான வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதன் மூலம் ஈரானிய அரசு சர்வதேச பொருளாதாரத் தடைகளில் இருந்து தப்பிப்பதற்கும் உலகளாவிய நிதி அமைப்பைப் பயன்படுத்துவதற்கும் வழிவகை செய்வதாக அமெரிக்க நிதித்துறை குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

