• Login
Tuesday, May 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சிசிரிவி இயங்கியபோதும் தரவுகள் சேமிக்கப்படவில்லை! கபிலவின் மரணத்தில் தொடரும் சர்ச்சை

GenevaTimes by GenevaTimes
May 19, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சிசிரிவி இயங்கியபோதும் தரவுகள் சேமிக்கப்படவில்லை! கபிலவின் மரணத்தில் தொடரும் சர்ச்சை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கபில சந்திரசேன அவர்களின் மரணம் தொடர்பான விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் வசித்த வீடு, அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் வீடு ஆகிய இரு இடங்களிலும் நிறுவப்பட்டிருந்த சிசிரிவி அமைப்புகள் இயங்கிக்கொண்டிருந்தபோதிலும், அவற்றில் எந்தவித தரவுகளும் சேமிக்கப்படவில்லை என கொழும்பு குற்றப்பிரிவு இன்று (19) கோட்டை நீதிபதி பாசன் அமரசேன முன்னிலையில் தெரிவித்துள்ளது.

இந்த வழக்குடன் தொடர்புடைய இரு வீடுகளிலும் பயன்படுத்தப்பட்ட இரண்டு DVR கருவிகள் இன்று நீதிமன்றத்தில் வழக்குப் பொருட்களாக சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், அவற்றை மேலதிக தொழில்நுட்ப ஆய்வுக்காக அரசாங்க பகுப்பாய்வாளரிடம் அனுப்ப நீதிமன்ற அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிசிரிவி அமைப்பு

மேலும், சிசிரிவி அமைப்புகளில் தரவுகள் ஏன் சேமிக்கப்படவில்லை என்பதை விளக்குவதற்காக, அந்த அமைப்புகளை நிறுவிய பொறியாளர் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

இதேவேளை, அரவிந்த டி சில்வாவின் வீட்டிற்கான நுழைவாயில்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தரைத்தள வாகன நிறுத்துமிடத்தின் வழியாக மேலும் இரண்டு நுழைவு பாதைகள் இருப்பது கண்டறியப்பட்டதாக குற்றப்பிரிவு நீதிமன்றத்துக்கு அறிவித்தது.

எனினும், 2026 மே 05 முதல் மே 07 வரை அந்த வழிகள் ஊடாக யாரும் நுழைந்ததற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

கபில சந்திரசேனாவின் மரணத்திற்கு முன்னர் இடம்பெற்ற தொலைபேசி தொடர்புகளின் பதிவுகளை சேகரிக்க நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில், வழங்கப்பட்ட கால அவகாசம் போதாமையால் மேலதிக கால அவகாசம் தேவைப்படுவதாக காவல்துறை தெரிவித்தது.

இது தொடர்பாக பிரமாணப் பத்திரம் ஒன்றையும் தாக்கல் செய்யவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

விசாரணையின் போது, கபில சந்திரசேனாவுக்குப் பிணை பெறுவதற்காக வழக்கறிஞரைச் சந்திக்கச் சென்ற பிணையாளர்கள் இந்த வழக்கில் சாட்சிகளாக பெயரிடப்பட்டுள்ளனரா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

நீதிமன்ற அனுமதி

அதற்கு பதிலளித்த கொழும்பு குற்றப்பிரிவு, குறித்த நபர்கள் வேறொரு வழக்கில் கொழும்பு பிரதான நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதால், அவர்களிடமிருந்து உடனடியாக வாக்குமூலம் பெற இயலவில்லை என தெரிவித்தது.

ஆனால், காவலில் உள்ள சாட்சிகளிடமிருந்து நீதிமன்ற அனுமதியுடன் வாக்குமூலம் பெறுவதற்கான அதிகாரம் புலனாய்வாளர்களுக்கு இருப்பதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் சாட்சிகள் தொடர்பாக மனு தாக்கல் செய்ய கொழும்பு குற்றப்பிரிவு ஒப்புக்கொண்டது.

இதனிடையே, கபில சந்திரசேனாவின் பிரேதப் பரிசோதனை தொடர்பான சான்றுகள் குறித்த மேலதிக விசாரணை இன்று (19) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தொடரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

கழுத்தில் குத்தப்பட்ட பெண் 10 மணி நேர அறுவை சிகிச்சையில் உயிர் பிழைத்தார் | Makkal Osai

Next Post

நாடுமுழுவதும் நாளை மருந்துக் கடைகள் வேலைநிறுத்தம் அறிவிப்பு: தமிழ்நாட்டில் நிலை என்ன? | India News (இந்தியா செய்திகள்)

Next Post
நாடுமுழுவதும் நாளை மருந்துக் கடைகள் வேலைநிறுத்தம் அறிவிப்பு: தமிழ்நாட்டில் நிலை என்ன? | India News (இந்தியா செய்திகள்)

நாடுமுழுவதும் நாளை மருந்துக் கடைகள் வேலைநிறுத்தம் அறிவிப்பு: தமிழ்நாட்டில் நிலை என்ன? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin