ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவு தலைவரைக் கொன்றதாக, இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.
பாலஸ்தீனக் கிளர்ச்சிப்படையான ஹமாஸின் இராணுவப் பிரிவு தலைவரான இஸ்-அல்-தின்-அல்-ஹதாத் என்பவரைக் கடந்த வெள்ளிக்கிழமை (மே 15) அன்று தாக்குதல் நடத்தி கொன்றதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த ஹமாஸ் அதிகாரி, 1970-ல் பிறந்த இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தினார்.ஹத்தாத்தின் மரணத்தை ஹமாஸ் பகிரங்கமாக அறிவிக்கவில்லை.
இன்று நடைபெற்ற இறுதிச்சடங்கு
மத்திய காசாவில் உள்ள அல் அக்ஸா தியாகிகள் மசூதியில், ஹத்தாத், அவரது மனைவி மற்றும் 19 வயது மகளுக்கு இன்று(16) சனிக்கிழமை கூட்டு இறுதிச் சடங்கு நடைபெற்றது.

அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை.
உள்ளூர் மருத்துவர்களின் கூற்றுப்படி, இஸ்ரேல் வெள்ளிக்கிழமை காசா மீது குறைந்தது இரண்டு தாக்குதல்களை நடத்தியது, இதில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
சின்வாரின் இடத்தை நிரப்பியவர்
வெள்ளிக்கிழமை அன்று தனது பாதுகாப்பு அமைச்சருடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், ஹமாஸ் தலைவரைக் குறிவைத்து இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார்; ஆனால் அவர் கொல்லப்பட்டாரா இல்லையா என்பதை அவர் குறிப்பிடவில்லை.

இஸ்ரேலில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்.7 அன்று நடைபெற்ற தாக்குதலில் 1,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலை நடத்த திட்டமிட்டவர்களில் இஸ்-அல்-தின்-அல்-ஹதாத் முதன்மையானவர் எனக் கூறப்படுகிறது.
ஹமாஸ் தலைவரான முகமது சின்வார் கொல்லப்பட்ட பிறகு அந்தப் பதவிக்கு, கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இஸ்-அல்-தின்-அல்-ஹதாத் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

