• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

உலகிலேயே இந்த 3 பேரால் மட்டும்தான் பாஸ்போர்ட் இல்லாமல் பயணம் செய்ய முடியும்… யாரெல்லாம் தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
May 29, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
உலகிலேயே இந்த 3 பேரால் மட்டும்தான் பாஸ்போர்ட் இல்லாமல் பயணம் செய்ய முடியும்… யாரெல்லாம் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலகில் பாஸ்போர்ட் முறை தொடங்கப்பட்டு 102 ஆண்டுகள் ஆகிறது. ஜனாதிபதி முதல் பிரதமர் வரை, அரசு பிரமுகர்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் செல்லும்போது, ​​அவர்களிடமும் ராஜதந்திர பாஸ்போர்ட் இருக்க வேண்டும். இந்த பூமியில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ள நிலையில், இந்த மூன்று பிரமுகர்களுக்கு மட்டும் பாஸ்போர்ட் தேவையில்லை என்ற சிறப்பு சலுகை உள்ளது.

இவர்கள் வெளிநாடு பயணம் செய்தால் பாஸ்போர்ட் பற்றி யாரும் அவர்களிடம் கேட்பதில்லை. மாறாக, ​அவர்களுக்கு கூடுதல் விருந்தோம்பல் மற்றும் முழு மரியாதையும் வழங்கப்படுகிறது. முந்தைய காலங்களில் ஒரு நாட்டின் குடிமகன் மற்றொரு நாட்டிற்குச் செல்லும்போது, ​​அவரிடம் வலுவான ஆவணங்கள் இருக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் உலக நாடுகளிடையே இல்லை. முதல் உலகப்போரும் நடந்து கொண்டிருந்த காலத்தில் தான் பாஸ்போர்ட் போன்ற நடைமுறையை உருவாக்குவது மிகவும் முக்கியம் என்பதை ஒவ்வொரு நாடும் புரிந்துகொள்ளத் தொடங்கியது.

விளம்பரம்

1920 இல் திடீரென்று எல்லாம் மாறியது. அமெரிக்கா தனது நாட்டிற்கு ரகசியமாக வரும் புலம்பெயர்ந்தோரை தடைசெய்யும் வகையில் உலகம் முழுவதும் பாஸ்போர்ட் போன்ற அமைப்பை உருவாக்க முன்முயற்சி எடுத்து வந்தது. லீக் ஆஃப் நேஷன்ஸில் அமைப்பில் இது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. 1924 இல், அமெரிக்கா தனது புதிய பாஸ்போர்ட் முறையை வெளியிட்டது.

இப்போது பாஸ்போர்ட் என்பது வேறொரு நாட்டிற்கு பயணம் செய்யும் நபருக்கு அதிகாரப்பூர்வ அடையாள அட்டையாக மாறிவிட்டது. அதில் அவரது பெயர், முகவரி, வயது, புகைப்படம், குடியுரிமை மற்றும் கையெழுத்து அனைத்தும் உள்ளன. அந்த நபர் செல்லும் நாட்டிற்கு அவரின் அடையாளத்தை கண்டுகொள்ள இது எளிமையான முறையாக மாறியது. தற்போது அனைத்து நாடுகளும் இ-பாஸ்போர்ட் வழங்கும் அளவிற்கு இந்த நடைமுறை முன்னேறியுள்ளது.

விளம்பரம்

மூன்று சிறப்பு நபர்களுக்கு மட்டும் விலக்கு

உலகில் எங்கு வேண்டுமானாலும் செல்ல பாஸ்போர்ட் தேவையில்லாத அந்த 3 சிறப்பு நபர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பிரிட்டன் மன்னர், ஜப்பான் ராஜா மற்றும் ராணி ஆகிய மூவருக்கும் தான் இந்த சலுகை உள்ளது. பிரிட்டன் மன்னராக சார்லஸ் ஆவதற்கு முன்பு மறைந்த ராணி எலிசபெத்திடம் இந்த சலுகை இருந்தது.

சார்லஸ் பிரிட்டன் மன்னராக பதவியேற்றவுடன், அவரது செயலர் தனது நாட்டின் வெளியுறவு அமைச்சகம் மூலம் அனைத்து நாடுகளுக்கும் ஒரு ஆவணச் செய்தியை அனுப்பினார். இப்போது பிரிட்டனின் அரச குடும்ப தலைமை பொறுப்பில் மன்னர் சார்லஸ் இருக்கிறார், எனவே அவரை முழு மரியாதையுடன் எங்கும் செல்ல அனுமதிக்க வேண்டும். இதில் எந்த தடையும் இருக்கக்கூடாது. இவ்வாறு அனைத்து நாடுகளுக்கும் செய்தி அனுப்பப்பட்டது.

விளம்பரம்

பிரிட்டன் மன்னருக்கு இந்த உரிமை உள்ள நிலையில், அவரது மனைவிக்கு இந்த உரிமை இல்லை. அவர்கள் வேறு நாட்டிற்குச் செல்லும்போது தூதரக பாஸ்போர்ட்டைத் தங்களிடம் வைத்திருக்க வேண்டும். இதேபோல், அரச குடும்பத்தின் முக்கிய நபர்களுக்கும் ராஜதந்திர பாஸ்போர்ட்களை வைத்திருக்க உரிமை உண்டு. இந்த வகை பாஸ்போர்ட் வைத்திருப்பவருக்கு சிறப்பு கவனம் மற்றும் மரியாதை வழங்கப்படுகிறது.

எலிசபெத் ராணியாக இருந்தபோது ​​அவருக்கு இந்த பாஸ்போர்ட் சிறப்பு சலுகை இருந்தது. ஆனால் அவரது கணவரான இளவரசர் பிலிப் ராஜதந்திர பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். பிரிட்டனில் அரச குடும்ப அரியணையில் அமர்ந்திருக்கும் நபருக்கே முதல் மரியாதை. ராணியின் கணவர் வாழ்நாள் இளவரசர் என்று அழைக்கப்படுகிறார் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

விளம்பரம்

ஜப்பானின் பேரரசர் மற்றும் பேரரசி

ஜப்பான் பேரரசர் மற்றும் பேரரசி ஏன் இந்த சலுகையை எப்படி பெற்றனர் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம். தற்போது ஜப்பானின் பேரரசராக இருப்பவர் நருஹிட்டோ. அவரது மனைவி மசாகோ ஓவாடா ஜப்பானின் பேரரசி. தந்தை அகிஹிட்டோ பேரரசராக பதவி துறந்த பிறகு அவர் இந்த பதவியை ஏற்றுக்கொண்டார். அவரது தந்தை ஜப்பான் பேரரசராக இருக்கும் வரை, அவரும் அவரது மனைவியும் பாஸ்போர்ட்  வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலை இருந்தது. 88 வயதான அகிஹிட்டோ 2019 ஆம் ஆண்டு வரை ஜப்பானின் பேரரசராக இருந்தார், அதன் பிறகு அவர் பேரரசர் பதவியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தார். எனவே, இப்போது அவர்கள் வெளிநாடு செல்லும்போது தூதரக பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும்.

விளம்பரம்

1971 ஆம் ஆண்டு முதல் வெளியுறவு அமைச்சகம் தனது பேரரசர் மற்றும் பேரரசிக்கு இந்த சிறப்பு ஏற்பாட்டைத் தொடங்கியதாக ஜப்பானின் அரசு ஆவண பதிவுகள் காட்டுகின்றன.

ஜப்பானின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிரிட்டனில் உள்ள கிங்ஸ் செயலகம் இம்மூவரும் வெளிநாடு செல்லும் பட்சத்தில் திட்டம் குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட நாட்டிற்கு முன்கூட்டியே அனுப்புகிறது.

இதையும் படிங்க : உள்ளாடையை கழட்டி இரும்பு வேலியில் தொங்க விடும் இளம் பெண்கள்.. காரணம் என்ன தெரியுமா?

பிரதமர் மற்றும் ஜனாதிபதிகளுக்கு சலுகை

விளம்பரம்

உலகின் அனைத்து நாட்டு பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குச் செல்லும்போது ​​அவர்கள் பாஸ்போர்ட்களை வைத்திருக்க வேண்டும். அவர்களின் பாஸ்போர்ட்கள் தூதரக பாஸ்போர்ட்களாக இருக்கும். இந்த தலைவர்களுக்கு பயணம் செல்லும் நாடு முழு சலுகைகளையும் வழங்குகிறது. இந்த தலைவர்களுக்கு பாதுகாப்பு சோதனைகள் மற்றும் பிற நடைமுறைகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் இந்த அந்தஸ்து பிரதமர், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் ஆகியோருக்கு உண்டு.

இந்தியா மூன்று ரக பாஸ்போர்ட்டை வழங்குகிறது. சாதாரண மக்களுக்கு நீல நிற பாஸ்போர்ட் இருக்கும். அரசாங்கத்துடன் தொடர்புடைய உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கான உத்தியோகபூர்வ பாஸ்போர்ட், ராஜதந்திர பாஸ்போர்ட் மெரூன் நிறத்தில் இருக்கும். மூன்றாவதாகே உச்சபட்ச சலுகை கொண்ட பாஸ்போர்ட் நாட்டின் பிரதமர், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதிக்கு வழங்கப்படுகிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

EPFOல் புது மெம்பர்கள்… ஒரே மாதத்தில் 14.41 லட்சம் பேர் சேர்ப்பு… வெளியான தகவல்!

Next Post

KL டவரின் நிர்வாகத்தை 2 நிறுவனங்கள் எடுத்து நடத்தவிருக்கின்றன | Makkal Osai

Next Post
KL டவரின் நிர்வாகத்தை 2 நிறுவனங்கள் எடுத்து நடத்தவிருக்கின்றன | Makkal Osai

KL டவரின் நிர்வாகத்தை 2 நிறுவனங்கள் எடுத்து நடத்தவிருக்கின்றன | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin