குறிப்பாக ஏர் போர்ஸ் விமானம் தனது விமானத்துக்கு பாதுகாப்பாக அனுப்பப்பட்டது குறித்து நெகிழ்ந்த அவர், இது இந்திய மக்களுக்கு கிடைத்த பெருமை என்று தெரிவித்தார். ஐக்கிய அரபு அமீரகம் தனது இரண்டாவது வீடு போன்றது என்றும் மோடி சிலாகித்தார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
அமீரகத்துடன் எரிசக்தி, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, கப்பல் போக்குவரத்து மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் போன்ற முக்கியத் துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
இது இந்தியா-
ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான உறவுக்கு புதிய உத்வேகம் அளித்துள்ளது. மேலும், இந்தியாவில் 5 பில்லியன் டாலர் அளவுக்கு
ஐக்கிய அரபு அமீரகம் முதலீடு செய்யவுள்ளது. இது பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என அதில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் எரிபொருள் விலைகளை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ள நிலையில் எண்ணெய் வளம் மிக்க ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மோடியின் பயணம் கவனம் பெற்றுள்ளது.
தொடர்ந்து மே 15-17 நெதர்லாந்து செல்லும் மோடி, மே 17-18 ஸ்வீடனில் இருப்பார். அதைத்தொடர்ந்து மே 19 இல் நார்வேவின் ஓஸ்லோவில் நடக்கும் இந்தியா – நார்டிக் உச்சிமாநாட்டில் கலந்துகொள்கிறார்.
