• Login
Tuesday, May 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || புத்தளம் அவசர சிகிச்சைப் பிரிவு மூடல்: நோயாளர்கள் இடமாற்றம்

GenevaTimes by GenevaTimes
May 12, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || புத்தளம் அவசர சிகிச்சைப் பிரிவு மூடல்: நோயாளர்கள் இடமாற்றம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter





புத்தளம் ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) நிலவும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக, அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டு, அந்தப் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் லசந்த லியனகே தெரிவித்துள்ளார்.


இதன்படி, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நான்கு நோயாளர்களில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கும், மற்றொருவர் கல்கமுவ பொது வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். ஏனைய இரு நோயாளர்களும் புத்தளம் வைத்தியசாலையிலேயே தங்கவைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.


பதில் பணிப்பாளரின் விளக்கம்:

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த பதில் பணிப்பாளர் வைத்தியர் லசந்த லியனகே, “தற்போது நிலவும் மழையுடனான வானிலையால் அவசர சிகிச்சைப் பிரிவைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தி, அவர்களின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பிரிவை மீண்டும் இயங்கச் செய்ய முடியுமா என்பதை ஆராய, புத்தளம் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தைச் சேர்ந்த குழுவினர் வருகை தரவுள்ளனர். அவர்களின் தீர்மானத்திற்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்றார்.


நோயாளர்களின் நிலை:

புத்தளம் ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவானது ஆறு கட்டில்களைக் கொண்டதாகும். புத்தளம், ஆனைமடுவ, கல்பිටி, வனாத்தவில்லுவ, நவகத்தேகம, மஹகும்புக்கடவல மற்றும் முந்தல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நோயாளர்கள் அவசர சிகிச்சைக்காக இந்த ஒரு பிரிவையே நம்பியுள்ளனர். தற்போது இப்பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், அவசர நிலையில் வரும் நோயாளர்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.


நீண்டகாலப் பிரச்சினை:

இதேவேளை, குறித்த அவசர சிகிச்சைப் பிரிவானது பல வருடங்களாக மிகவும் சிதிலமடைந்த நிலையில் காணப்படுவதாகவும், அதனை அகற்றிவிட்டு புதிய பிரிவை அமைப்பதற்கான திட்டங்கள் இருந்தபோதிலும், அவை இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.



Read More

Previous Post

ஜோகூர் பாருவில் 10 இடங்களில் குடிநுழைவுத்துறை அதிரடி சோதனை: 33 வெளிநாட்டினர் கைது!

Next Post

DECODE | MIRV தொழில்நுட்பம் – நடுங்கும் எதிரி நாடுகள்!

Next Post
DECODE | MIRV தொழில்நுட்பம் – நடுங்கும் எதிரி நாடுகள்!

DECODE | MIRV தொழில்நுட்பம் - நடுங்கும் எதிரி நாடுகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin