Last Updated:
ஆண்களுக்கான போட்டியில், ஜப்பானைச் சேர்ந்த ஜோ ஃபுகுடா 78.95 கிலோ மீட்டர் தூரம் ஓடி புதிய சாதனை படைத்தார்.
தண்டுவடக் காயத்திற்கு சிகிச்சை கண்டுபிடிப்பதற்கான நிதி திரட்டுவதற்காக உலகின் பல்வேறு நகரங்களில் மிகப்பெரிய ஓட்டப் பந்தய நிகழ்வு நடந்துள்ளது.
‘விங்ஸ் ஃபார் லைஃப் வேர்ல்ட் ரன்’, என்ற பெயரிலான இந்த உலகின் மிகப்பெரிய ஓட்டப் பந்தயம், இந்தியாவின் மும்பை உட்பட நியூயார்க், லண்டன், மாண்ட்ரியல், வியன்னா, லிமா, நைரோபி, டோக்கியோ, சிட்னி, இஸ்தான்புல் என பல்வேறு நாடுகளின் முதன்மை நகரங்களில் நடைபெற்றது. தண்டுவடக் காயத்திற்கு சிகிச்சை கண்டுபிடிப்பதற்கான நிதி திரட்டுவதற்காக நடைபெற்ற இந்த சர்வதேச நிகழ்வில், 192 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 3,46,527 பேர் கலந்துகொண்டனர்.
13வது ஆண்டாக நடைபெறும், இதில் 173 நாடுகளைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர்கள், ‘கேட்சர் கார்’ எனப்படும் நகரும் இலக்குக் கோட்டை நோக்கி ஓடினர். ஆண்களுக்கான போட்டியில், ஜப்பானைச் சேர்ந்த ஜோ ஃபுகுடா 78.95 கிலோ மீட்டர் தூரம் ஓடி புதிய சாதனை படைத்தார். மேலும், பெண்களுக்கான போட்டியில், நெதர்லாந்தைச் சேர்ந்த மிக்கி கீட்டல்ஸ் 62.24 கிலோ மீட்டர் தூரம் ஓடி, புதிய தூர சாதனையை படைத்தார்.
May 11, 2026 11:31 AM IST


