Last Updated:
திமுகவுடனான கூட்டணி காங்கிரஸை நெருக்கடிகளிலிருந்து மீட்டெடுத்தது; உண்மையில், 2014-க்கு முன்பு பத்து ஆண்டுகளாக அது வழிநடத்திய அரசாங்கம் பெரும்பாலும் திமுகவின் காரணமாகவே நீடித்தது. தற்போது அரசியல் சூழல் மாறிய நேரத்தில், நம்பிக்கை துரோகத்திற்கு ஆளாக்கப்பட்டதாக கூறினார்.
திமுகவுக்கு காங்கிரஸ் கட்சி துரோகம் இழைத்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, கடந்த 25 முதல் 30 ஆண்டுகள் வரை, காங்கிரஸ் கட்சி திமுகவுடன் மிக நெருக்கமான உறவைப் பேணி வந்ததாகவும், காங்கிரஸை பல்வேறு நெருக்கடிகளில் இருந்து திமுகவுடனான இந்த கூட்டணியே மீட்டெடுத்தது என்றும் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபட்ட வந்த திமுக, தற்போது அரசியல் சூழல் மாறிய நேரத்தில், நம்பிக்கை துரோகத்திற்கு ஆளாக்கப்பட்டதாக கூறினார்.
#WATCH | Bengaluru | Prime Minister Narendra Modi says, “…Just look at the situation in Tamil Nadu right now. For twenty-five to thirty years, the Congress shared a close relationship with the DMK. Time and again, the alliance with the DMK pulled the Congress out of crises;… pic.twitter.com/EIQ2fdIQmY
— ANI (@ANI) May 10, 2026
அரசியலில் தனது இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக, காங்கிரஸிற்கு தற்போது வேறொரு கட்சியின் துணை மீண்டும் தேவைப்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Bangalore [Bangalore],Bangalore,Karnataka

