Last Updated:
இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தற்காலிக கேப்டனாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் செயல்பட்டார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அதிரடியாக விளையாடிய இந்த இணை, வெறும் 8.1 ஓவர்களில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்து அசத்தியது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் தொடக்க விக்கெட்டுக்கு அதிக முறை 100 ரன்களுக்கு மேல் சேர்த்த ஜோடி என்ற ஆல்-டைம் சாதனையை (All-time record) இவர்கள் சமன் செய்துள்ளனர்.
தற்போது கில் – சாய் சுதர்சன் ஜோடி 6 முறை நூறு ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்துள்ளது. இதற்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புகழ்பெற்ற தொடக்க இணைகளான டேவிட் வார்னர் – ஷிகர் தவான் மற்றும் அபிஷேக் சர்மா – டிராவிஸ் ஹெட் ஆகிய ஜோடிகள் தலா 6 முறை இந்தச் சாதனையைப் படைத்திருந்தனர். அந்த ஜாம்பவான்களின் வரிசையில் தற்போது கில் மற்றும் சாய் சுதர்சன் இணைந்துள்ளனர்.
இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தற்காலிக கேப்டனாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் செயல்பட்டார். அந்த அணியின் வழக்கமான கேப்டன் ரியான் பராக் காயம் காரணமாக விளையாடாததால் இவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது.


