ஈரானால் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டமையானது, அடிப்படை கடல் சார் சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் மைக் வால்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பாரசீக வளைகுடா நீரிணை அதிகாரசபை ஒன்றை உருவாக்கி, அதன் ஊடாக அந்த நீர்வழியைக் கடக்கும் கப்பல்களுக்கு வரி விதிக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளையும் அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
இதேவேளை, இந்த நீரிணையில் மாலுமிகளைத் தடுத்து வைப்பதானது ஒரு வஞ்சகமான செயல் என்றும் வால்ட்ஸ் விமர்சித்துள்ளார்.
தண்டிக்கப்படும் உலகம்
மேலும், ஏதேனும் ஒரு முரண்பாட்டை தீர்ப்பதற்காக ஒட்டுமொத்த உலகையுமே தண்டிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அவர் கூறியுள்ளார்.

Image Credit: ABC News
அத்துடன், சர்வதேச நீர்வழியில் இருந்து கண்ணிவெடிகளை அகற்ற வேண்டும் மற்றும் சட்டவிரோத வரிகளை அறவிடக்கூடாது என்பதே எமது எளிமையான கோரிக்கை என்று தெரிவித்த வால்ட்ஸ், இத்தகைய மீறல்கள் குறித்து சபையில் நாம் பேச வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

