மத்திய கிழக்கில் நிலவிய பதற்றமான சூழலால் ஏற்பட்ட தற்காலிகத் தடைகளுக்குப் பிறகு இலங்கை மற்றும் இஸ்ரேல் இடையிலான விமானப் போக்குவரத்து தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.
இதன் மூலம் இஸ்ரேலில் பணியாற்றுவதற்காகக் காத்திருந்த இலங்கைத் தொழிலாளர்கள் மீண்டும் அங்கு செல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கடந்த வியாழக்கிழமை 47 பேர் அடங்கிய இலங்கைத் தொழிலாளர் குழுவொன்று இஸ்ரேல் நோக்கிப் புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
202-வது குழு
இந்தப் புதிய குழுவில் 42 பெண்களும் 5 ஆண்களும் உள்ளடங்குவதுடன், அவர்கள் அனைவரும் இஸ்ரேலின் பராமரிப்புத் துறையில் பணியாற்றுவதற்காகவே அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மேற்படி குழுவானது வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 202-வது குழுவென்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

