கத்தார் வழங்கிய போயிங் 747 ரக சொகுசு விமானத்தை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய அதிகாரப்பூர்வ ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானமாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர அமெரிக்க விமானப்படை திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ட்ரம்ப்பின் பிறந்தநாளான ஜூன் 14-ஆம் திகதியன்றே அதனை அவரிடம் ஒப்படைப்பதற்கான தீவிர முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ட்ரம்ப்பின் விருப்பம்
இதேவேளை, கத்தார் அரச குடும்பத்தால் பரிசாக வழங்கப்பட்ட இந்த விமானத்தை ஜனாதிபதியின் பாதுகாப்புத் தரத்திற்கு உயர்த்துவதற்காக சுமார் 400 மில்லியன் டொலர் செலவில் நவீன தகவல் தொடர்பு வசதிகள் மற்றும் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Image Credit: PBS
அத்தோடு, இந்த விமானத்தின் வெளிப்புறத் தோற்றம் ஜனாதிபதி ட்ரம்ப்பின் விருப்பத்திற்கேற்ப சிவப்பு, வெள்ளை மற்றும் நீல நிறங்களைக் கொண்ட புதிய வடிவமைப்பில் வர்ணம் பூசப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.
அதிகார துஷ்பிரயோகம்
இந்த நிலையில், ஒரு வெளிநாட்டிடம் இருந்து இவ்வளவு பெரிய பரிசை ஏற்பது அதிகார துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும் என எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் விமர்சித்து வரும் நிலையில், வரிப்பணத்தைச் சேமிக்கவே இம்முடிவு எடுக்கப்பட்டதாக ட்ரம்ப் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

அதிகாரப்பூர்வமான புதிய விமானங்கள் தயாராவதற்கு 2028-ஆம் ஆண்டு வரை காலதாமதம் ஏற்படும் என்பதால், இந்த விமானம் இடைக்காலத் தீர்வாகப் பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

