ஈரான் ஒரு உடன்பாட்டிற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், போர் நிறுத்தத்திற்கு முன்பு இருந்ததை விட “மிகவும் கடுமையான அளவிலும் தீவிரத்திலும்” ஈரான் மீது அமெரிக்கா குண்டுவீச்சைத் தொடங்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
“ஈரான் பிரதிநிதிகளுடன் ஒரு முழுமையான மற்றும் இறுதி உடன்பாட்டை எட்டுவதில் பெரும் முன்னேற்றம்” ஏற்பட்டதன் காரணமாக, ஹோர்முஸ் நீரிணைதை் திறப்பதற்கான அமெரிக்க இராணுவத்தின் “புராஜெக்ட் ஃப்ரீடம்” நடவடிக்கையை ட்ரம்ப் இடைநிறுத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த அச்சுறுத்தல் வந்துள்ளது.
“ குறுகிய காலத்திற்கு” இடைநிறுத்தப்படும் “புராஜெக்ட் ஃப்ரீடம்”
தெஹ்ரானுடன் ஒரு உடன்பாட்டை இறுதி செய்ய முடியுமா என்பதைப் பார்ப்பதற்காக இந்த நடவடிக்கை “ஒரு குறுகிய காலத்திற்கு” இடைநிறுத்தப்படும் என்று ட்ரம்ப் கூறினார்.

போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவும் ஈரானும் ஒரு பக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்யும் தறுவாயில் இருப்பதாக, அமைதி முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஒரு பாகிஸ்தானிய வட்டாரம் கூறியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது ஆக்சியோஸ் செய்தி நிறுவனத்தின் முந்தைய அறிக்கையை உறுதிப்படுத்துகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

