டாமன்சாரா பெர்டானாவில் சில கடைகளுக்கு அருகே இரண்டு கத்திகளுடன் அட்டூழியம் செய்த மலேசியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.பெட்டாலிங் ஜெயா காவல்துறைத் தலைவர் ஷம்சுதீன் மமாட், இரவு 7 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும், சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்ட காவல்துறையினர், கடைகளில் ஒன்றின் படிக்கட்டுக்கு அருகே சந்தேக நபரைக் கண்டதாகவும் கூறினார்.
காவல்துறையினர் சந்தேக நபரை அணுகி, ஆயுதங்களை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டனர். பின்னர், எந்தவித விரும்பத்தகாத சம்பவமும் நிகழாமல் அவர் கைது செய்யப்பட்டார் என்று பெரித்தா ஹரியான் செய்தி நிறுவனத்திடம் அவர் கூறினார்.
சட்டவிரோத நோக்கங்களுக்காக பொது இடத்தில் தாக்குதல் ஆயுதத்தை வைத்திருந்ததாக சந்தேக நபருக்கு எதிராக விசாரணை ஆணை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மே 7 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவார்.




