சிறுபோகத்திற்காக விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் உரத்திற்கான போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள கமநல சேவை நிலையங்களுக்கு உரத்தைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து கட்டணம் 50 ரூபாவிலிருந்து 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேரிட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உர விநியோகம்
அத்தோடு, இந்த நிலையங்களில் ஒரு பை உரம் 9,550 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நெற்செய்கைக்காக ஏக்கருக்கு 90 கிலோ யூரியா உரம் தேவைப்படுவதாக விவசாயத் திணைக்களம் பரிந்துரைத்துள்ளது.

இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் போதுமான உர விநியோகத்தை வழங்க முடியாது என விவசாய பிரதி அமைச்சர் நிமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை அம்பாறை, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சிறுபோகத்திற்கான நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஒரு மாதம் கடந்த நிலையிலும் தேவையான அளவு உரம் உரிய முறையில் தமக்கு விநியோகிக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

