• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மிசோரம் கனமழை: கல்குவாரி பாறைகள் சரிந்து பலியானோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு | 17 dead, 6 trapped under debris as stone quarry collapses in Mizoram amid rains

GenevaTimes by GenevaTimes
May 28, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
மிசோரம் கனமழை: கல்குவாரி பாறைகள் சரிந்து பலியானோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு | 17 dead, 6 trapped under debris as stone quarry collapses in Mizoram amid rains
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐஸ்வால்: மிசோரம் மாநிலம் ஐஸ்வால் மாவட்டத்தில் கனமழை காரணமாக கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. 6 பேர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கிழக்குப் பகுதியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய ரீமல் புயல், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் கடற்கரைகளுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கரையைக் கடந்தது. இந்நிலையில், தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மிசோரம் மாநிலம் ஐஸ்வால் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் இன்று( மே 28) காலை பாறைகள் சரிந்து விழுந்தன. இதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளதாகவும், 6 பேர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாகவும் மிசோரம் மாநில டிஜிபி அனில் சுக்லா தெரிவித்துள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “ரீமல் புயல் கரையை கடந்ததை அடுத்து பெய்த இடைவிடாத மழை காரணமாக மே 28 காலை, ஐஸ்வால் மாவட்டத்தில் ஒரு கல் குவாரியில் பாறைகள் இடிந்து விழுந்தன. ஐஸ்வால் நகரின் தெற்கு புறநகரில் உள்ள மெல்தும் மற்றும் ஹ்லிமென் இடையேயான பகுதியில் இன்று காலை 6 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. இதில், 17 பேர் இறந்தனர். 6 பேர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர்.

கனமழை காரணமாக பேரிடர் நிகழ்ந்த இடத்தில் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கல் குவாரியில் பாறைகள் சரிந்ததில் பலியானவர்களில் நான்கு வயது சிறுவனும், ஆறு வயது சிறுமியும் அடங்குவர். இரண்டு நபர்களை நாங்கள் உயிருடன் மீட்டுள்ளோம்.

தொடர் கனமழை காரணமாக மாநிலத்தின் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில், இரண்டு பேர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். மற்றொரு இடத்தில், ஒரு கட்டிடம் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டது. அதில், மூன்று பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது

தேசிய நெடுஞ்சாலை 6ல் நிலச்சரிவு ஏற்பட்டதால், மாநிலத்தின் தலைநகரம் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலைகளும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளன” என மிசோரம் மாநில டிஜிபி அனில் சுக்லா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த சம்பவங்களை அடுத்து, உள்துறை அமைச்சர் கே. சப்தங்கா, தலைமைச் செயலாளர் ரேணு ஷர்மா மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் லால்துஹோமா அவசர ஆலோசனை நடத்தினார். மழை காரணமாக, அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் தவிர மற்றவர்கள், வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பாறைகள் சரிந்து விழுந்தது உள்ளிட்ட மழையால் ஏற்பட்ட பேரிடர்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 4 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் லால்துஹோமா அறிவித்துள்ளார். அதோடு, கல் குவாரி இடிந்து இறந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சத்துக்கான காசோலைகளை அவர் வழங்கினார். மீத தொகை விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரீமல் புயல் மேற்கு வங்கத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. பல்வேறு இடங்களில் மீன் கம்பங்கள் கீழே சரிந்ததை அடுத்து, அவற்றை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரும்பாலான இடங்களில் மரங்கள் வேரோடு சரிந்துள்ளதால் அவற்றை அப்புறப்படுத்தும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். புயல் தாக்குவதற்கு முன்பாக மேற்கு வங்கத்தில் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதனிடையே, அடுத்த இரண்டு நாட்களுக்கு அசாம் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



Read More

Previous Post

தமிழ் பொதுவேட்பாளர் : யாழ்ப்பாண வணிகர் கழகம் பூரண ஆதரவு

Next Post

கவுதம் கம்பீரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்… கேகேஆர் அணியை சாம்பியன் ஆக்கிய உத்திகள்! | Gautham Gambhir’s masterstroke made KKR the champion!

Next Post
கவுதம் கம்பீரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்… கேகேஆர் அணியை சாம்பியன் ஆக்கிய உத்திகள்! | Gautham Gambhir’s masterstroke made KKR the champion!

கவுதம் கம்பீரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்... கேகேஆர் அணியை சாம்பியன் ஆக்கிய உத்திகள்! | Gautham Gambhir's masterstroke made KKR the champion!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin