புதிய இணைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, இன்று (29) நீதிமன்றத்தில் முற்படுத்தபட்டதை தொடர்ந்து, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மல்லகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்டதை தொடர்ந்து மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக காணிப் பிரச்சினை ஒன்றில் பெண் ஒருவரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் அர்ச்சுனாவுக்குக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
யாழ். பெரியவிலான் பகுதியில் கடந்த சனிக்கிழமை (25.04.2026) காணி பிணக்கு தொடர்பில் அர்ச்சுனாவுக்கும் மற்றுமொரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்ட சம்பவம் பேசுபொருளானது.
சம்பவ தினத்தன்று நாடாளுமன்ற உறுப்பினர் யாழ்ப்பாணத்தின் பெரியவிலன் பகுதியில் உள்ள நிலத்தைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இரண்டு பெண்கள், அந்த நிலத்தின் ஒரு பகுதி தங்களுக்குச் சொந்தமானது என்று கூறி நாடாளுமன்ற உறுப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தல்
வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் இராமநாதன் அர்ச்சுனா வைத்திருந்த தனது கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தல் விடுத்திருந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி இளவாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அவர், மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற காணி தொடர்பான தகராறு சம்பவம் ஒன்று தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சம்பவத்தின் போது, அர்ச்சுனாவின் தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் ஒருவர் யாழ் .போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முறைபாட்டில் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

