ஈரானின் துறைமுகங்கள் முற்றுகையிடப்பட்டிருக்கும் இந்த நேரத்தில், அமெரிக்க ராணுவம் மற்றொரு வர்த்தகக் கப்பலில் ஏறியுள்ளது. ஆனால், முந்தைய நிகழ்வுகளைப் போலல்லாமல், இந்தக் கப்பல் அதன் வழியில் செல்ல அனுமதிக்கப்பட்டது.
அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு, கடற்படையினர் ‘ப்ளூ ஸ்டார் III’ கப்பலில் ஏறியதாகவும், ஆனால் “சோதனை நடத்திய பின்னர், அதன் பயணத்தில் ஈரானிய துறைமுகம் எதுவும் இல்லை என்பதை உறுதிசெய்த பின்னர்கப்பலை விடுவித்தனர்” என்றும் கூறியது.
கப்பலுக்குள் இறங்கும் அமெரிக்க இராணுவம்
அதனுடன் இணைக்கப்பட்டிருந்த ஒரு காணொளியில், அமெரிக்கப் படைகள் உலங்கு வானூர்தியிலிருந்து கயிறுகள் மூலம் கப்பலுக்குள் இறங்குவது காட்டப்பட்டது.
Earlier today in the Arabian Sea, U.S. Marines from the 31st Marine Expeditionary Unit boarded M/V Blue Star III, a commercial ship suspected of attempting to transit to Iran in violation of the U.S. blockade of Iranian ports. U.S. forces released the vessel after conducting a… pic.twitter.com/UFx329OsHj
— U.S. Central Command (@CENTCOM) April 28, 2026
இரண்டு வாரங்களுக்கு முன்பு ட்ரம்ப் நிர்வாகம் ஈரானிய கப்பல் போக்குவரத்திற்கு முற்றுகையைத் தொடங்கியதிலிருந்து, இவ்வாறு ஏறப்பட்ட குறைந்தது நான்காவது வர்த்தகக் கப்பல் ‘ப்ளூ ஸ்டார்’ ஆகும்.
ஈரானை நெருக்கடிக்கு உள்ளாக்க அமெரிக்க முற்றுகை
ஆனால், அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படாத முதல் கப்பல் இதுவாகும்.
போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானை நெருக்கடிக்கு உள்ளாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த அமெரிக்க முற்றுகை அமைந்துள்ளது.

எரிசக்திப் போக்குவரத்திற்கான முக்கிய நீர்வழியான ஹோர்முஸ் நீரிணையை தெஹ்ரான் துண்டித்திருப்பது உலகப் பொருளாதாரம் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

