இதுபற்றி ஆஸ்திரேலியாவின் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அனிகா வெல்ஸ் இதுபற்றி தெரிவிக்கையில், “இப்போதெல்லாம் மக்கள் செய்திகளை நேரடியாக ஃபேஸ்புக், டிக்டாக் மற்றும் கூகுள் மூலமாகவே அதிகம் பெறுகிறார்கள். எனவே அந்தத் தளங்கள், தங்களின் வருமானத்திற்கு உதவும் செய்திகளுக்காக சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனங்களுக்கு உரிய தொகையைத் தருவதுதான் நியாயம். அதற்காகவே இந்த சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அந்நிறுவனங்கள் மறுத்தால், அவை இன்னும் அதிக பணம் செலுத்த நேரிடும். பெரிய நிறுவனங்களின் மிரட்டலுக்கு ஆஸ்திரேலியா ஒருபோதும் பணியாது” என்றுள்ளார்.

