இருப்பினும், இதில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. அது என்னவென்றால், கணக்கு எவ்வளவு தாமதமாகத் திறக்கப்படுகிறதோ, அந்த அளவிற்கு கூட்டு வட்டிப் பலன் குறைவாகவே கிடைக்குமாம். இந்தத் திட்டத்தின் முதிர்வுக் காலம் 21 ஆண்டுகள் என்பதால், முதலீட்டை எவ்வளவு சீக்கிரம் தொடங்குகிறோமோ, அவ்வளவு பெரிய நிதி உருவாக்கப்படும். உதாரணமாக, பெண் குழந்தை பிறந்த உடனேயே கணக்குத் தொடங்கினால், முழு 21 ஆண்டுகளுக்கும் வட்டிப் பலன் கிடைக்கும். ஆனால், 5 முதல் 6 ஆண்டுகளுக்குப் பிறகு கணக்குத் தொடங்கினால், மொத்த வட்டித் தொகை ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


