பிரான்சின் லியோன் நகரில் நடைபெறவுள்ள இன்டர்போலின் முதலாவது “பொதுத் தொடர்புகளுக்கான உலகளாவிய மாநாட்டில்” (1st Global Conference for Public Communications) கலந்துகொள்வதற்காக, இலங்கை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) திரு. எஃப்.யு. வூட்லர் (Mr. F.U. Wootler) அவர்களுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பதை இலங்கை பொலிஸ் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது
இந்த உயரிய மாநாடு 2026 ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை பிரான்சின் லியோன் நகரில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது
குறிப்பாக, 2025 நவம்பர் மாதம் இடம்பெற்ற “தித்வ அனர்த்தத்தின்” (Dithwa Disaster) போது இலங்கை பொலிஸார் மேற்கொண்ட நெருக்கடி காலத் தொடர்பாடல் அணுகுமுறைகள் மற்றும் அதன் செயல்திறன் குறித்து வூட்லர் இந்த மாநாட்டில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்
“இன்டர்போல் வான்கார்ட் பி” (INTERPOL VANGUARD B) திட்டத்தில் அவர் ஏற்கனவே வெற்றிகரமாகப் பங்கேற்றதைத் தொடர்ந்து, சர்வதேச சட்ட அமுலாக்க ஒத்துழைப்பிற்கு அவர் வழங்கி வரும் தொடர்ச்சியான பங்களிப்பிற்குச் சான்றாக இந்தத் தெரிவு அமைந்துள்ளது
உதவி பொலிஸ் அத்தியட்சகர் திரு. வூட்லர் அவர்கள் வெளிநாடு சென்றிருக்கும் காலப்பகுதியில், பொலிஸ் அத்தியட்சகர் (SP) மினுர சேனாரத்ன பதில் கடமைகளை மேற்கொள்வார்


