நாட்டின் பெரும்பாலான விவசாய பகுதிகளில் பெய்யும் தென்மேற்கு பருவமழையானது இயல்பை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழைக்காக முன்னறிவிப்பு குறித்த விவரங்களை இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அடுத்த மாதத்திற்கான மழை மற்றும் வெப்பநிலை குறித்தும் வானிலை ஆய்வு மையத் தலைமை இயக்குநர் டாக்டர் மிருதுஞ்சிய மொஹபத்ரா டெல்லியில் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை நீண்ட கால சராசரியில் 106% ஆக இருக்கும் என தெரிவித்துள்ளார். எனவே, 2024 ஆம் ஆண்டு பருவமழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) நாடு முழுவதும் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: மழைக்கு ரெஸ்ட்… இங்கெல்லாம் 108 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தும்…
தென்மேற்குப் பருவமழை (ஜூன் முதல் செப்டம்பர் வரை) இந்தியாவின் மத்திய மற்றும் தெற்கு தீபகற்ப பகுதியில் இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும் வடமேற்கு இந்தியாவில் இயல்பாகவும் வடகிழக்கு இந்தியாவில் இயல்புக்கு குறைவாகவும் இருக்கும் எனவும் மிருதுஞ்சிய மொஹபத்ரா எனவும் தெரிவித்துள்ளார்.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)