Last Updated:
கடந்த நிதி ஆண்டில் வருவாய் உயர்ந்ததை அடுத்து ரிலையன்ஸ் குழும பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றிற்கு 6 ரூபாய் பங்காதாயம் வழங்க உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம், சர்வதேச அளவில் நிலவும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியிலும் கடந்த நிதி ஆண்டில் ரிலையன்ஸ் ஆண்டு வருமானம் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதி ஆண்டில் ரிலையன்ஸ் நிறுவனம் 11 லட்சத்து 76 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டிய நிலையில் அதில் 95 ஆயிரத்து 754 கோடி ரூபாய் நிகர லாபம் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் அதனால் உலகளவில் எரிசக்தி துறையில் ஏற்பட்டுள்ள சுணக்கம் உள்ளிட்ட கால சூழல்களுக்கு மத்தியிலும் ரிலையன்ஸ் நிறுவன வருவாய் அதிகரித்துள்ளது.
இதில் ஜியோ, ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனத்தின் லாபம் கடந்த நிதி ஆண்டில் 12 புள்ளி 7 சதவீதம் அதிகரித்து 44 ஆயிரத்து 928 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. அதேபோல், சில்லரை வணிகத்தில் ரிலையன்ஸ் மார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்த நிதி ஆண்டில் 10 புள்ளி 8 சதவீதம் உயர்ந்து 98 ஆயிரத்து 232 கோடி ரூபாயை மொத்த வருவாயாக ஈட்டியுள்ளது.
மேற்கு ஆசிய போர் பதற்றத்துக்கு மத்தியில்… ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் வரலாறு காணாத அளவுக்கு அதிகரிப்பு!


