பாமாயில் தட்டுப்பாடு ஏற்படுவது ஏன் ஆபத்து? இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொத்த சமையல் எண்ணெயில் 40% பாமாயில்தான். மற்ற சமையல் எண்ணெய்களை விட இது விலை மலிவானதாகவும், நீண்ட காலத்திற்கு கெட்டுப்போகாமலும் இருப்பதால், பல குடும்பங்கள் சமையலுக்கு பெரும்பாலும் பாமாயில்தான் பயன்படுத்துகின்றன. இன்றைய தேதியில் இந்தியச் சந்தையில் விற்கப்படும் அனைத்து பொரித்த சிப்ஸ், பப்ஸ், சமோசா, வடை, பிரெஞ்சு ஃப்ரைஸ், முறுக்கு, பிஸ்கட்டுகள், குக்கீகள், கேக், பேஸ்ட்ரிகள், பிற பேக்கரிப் பொருட்கள், உடனடியாக உண்ணக்கூடிய வகையிலான இன்ஸ்டண்ட் உணவுகள், சாஸ், கிரேவிகள், ரொட்டி, பீட்சா, பியூட்டிக்கு கிரீம்கள், லோஷன்கள், சோப் வகைகள், மாய்ஸ்ச்சரைசர்கள், லிப்ஸ்டிக் உட்பட பல பொருட்களிலும் பாமாயில் பயன்படுத்தப்படுகின்றன. இதிலேயே பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்டால் என்ன ஆகுமென உங்களுக்கே புரிந்திருக்கும்.


