Last Updated:
தவெக தலைவர் விஜயின் அரசியல் கட்சிக்கு தமிழகத்தில் ஒரு சிறப்பான தொடக்கம் கிடைக்காது – நிதின் நபின்
நாட்டின் பெண் வாக்காளர்கள் பாஜகவுடன் இருக்கிறார்கள் என்றும், தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சிக்கு அமைக்கும் என்றும் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் கூறினார். நெட்வொர்க் 18 குழும ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் அவர் இதைத் தெளிவுபடுத்தினார். அந்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் இதோ.
1. பெண்களுக்கு எதிரான எதிர்ப்பு: மோடியை எதிர்க்கும் முயற்சியில், எதிர்க்கட்சிகள் நாட்டின் ‘ஆதி அபாதி’ (மக்கள் தொகையில் பாதி) உள்ள பெண்களைக் கூட எதிர்க்கத் தொடங்கியுள்ளன.
2. மேற்குவங்களத்தில் ஆட்சி: மக்கள் ஆதரவை ஆராயும்போது, மேற்கு வங்கத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்பது தெளிவாகிறது.
3. பெண் வாக்காளர்களின் ஆதரவு: நாடு முழுவதும் உள்ள பெண் வாக்காளர்கள் பாஜக பக்கம் உள்ளனர். மேற்கு வங்கத்திலும் இந்த நிலை மாறப்போவதில்லை. அங்கு பெண்களுக்கு மரியாதை இல்லை, அவர்கள் அச்சத்தில் வாழ்கிறார்கள்.
4. வங்கதேச ஊடுருவல்காரர்கள்: வங்கதேச ஊடுருவல்காரர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நிச்சயமாக நீக்கப்படும்; அவர்கள் சிறுபான்மையினரா அல்லது பெரும்பான்மையினரா என்பது ஒரு பொருட்டல்ல. நாம் இந்த நாட்டின் குடிமக்களுக்குப் பொறுப்பானவர்கள், வெளிநாட்டினருக்கு அல்ல. மம்தா பானர்ஜி ஏன் அவர்களுக்கு ஆதரவளிக்கிறார்?
5. தமிழக அரசியல்: தவெக தலைவர் விஜயின் அரசியல் கட்சிக்கு தமிழகத்தில் ஒரு சிறப்பான தொடக்கம் கிடைக்காது. தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியத்தை நான் காணவில்லை. விஜய்யுடன் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியமில்லை, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியே (NDA) ஆட்சி அமைக்கும்.
6. ராகுல் காந்தி: எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது வாஜ்பாய் போன்ற மூத்த தலைவர்கள் வகித்த ஒரு பதவியாகும். ஆனால் ராகுல் காந்தியின் நடத்தையையும் பேச்சையும் பாருங்கள், அது முற்றிலும் முதிர்ச்சியற்றதாக இருக்கிறது.
Chennai,Tamil Nadu
Apr 23, 2026 10:54 AM IST


