
ஹோர்மூஸ் நீரிணையில் இரண்டு கப்பல்களை ஈரான் இன்று கைப்பற்றியுள்ளது.
கடல்சார் மீறல்களுக்காக இரண்டு கப்பல்களைக் கைப்பற்றிய புரட்சிகரக் காவலர்கள், அவற்றை கரைகளுக்கு கொண்டு சென்றதாக ஈரானிய செய்தி முகவரகம் கூறியுள்ளது.
முன்னதாக மூன்று கப்பல்கள் தாக்குதலுக்கு இலக்கானதாக பிரித்தானிய கடல்வழி பாதுகாப்பு முகவரகமான யு.கே.எம்.டி.ஓ தெரிவித்துள்ளது.

