யாழ்ப்பாணத்தில் காவல் நிலையம் ஒன்றின் பிற்பகுதியில் உள்ள
வெற்றுக்காணிக்குள் இருந்து 10 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கொடிகாமம் காவல் நிலையத்தின் பின்புறமாக உள்ள வெற்றுக்காணிக்குள்
சந்தேகத்திற்கு இடமான முறையில் பொதி ஒன்று காணப்படுவதாக காவல்துறைக்கு தகவல்
கிடைத்ததை அடுத்து , அங்கு விரைந்த காவல்துறையினர் பொதியை மீட்டு சோதனை செய்தனர்.
பத்து கிலோ கஞ்சா மீட்பு
அதற்குள் 10 கிலோ கேரளா கஞ்சா காணப்பட்டுள்ளது. அதனை மீட்டு காவல்நிலையம்
எடுத்து சென்ற காவல்துறையினர்,அது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்துள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

