இம்முறை மே தினக் கொண்டாட்டங்களை நடத்துவது குறித்து இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
வேறு ஏதேனும் ஒரு கட்சி அல்லது அமைப்புடன் இணைந்து மே தினத்தைக் கொண்டாடுவது குறித்தும் இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை என கட்சி மேலும் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் தலதா அத்துகோரளவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

