போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளின் பேரில் நிக்கோலஸை கைது செய்வதாக சொல்லி டிரம்ப் மேற்கொண்ட அந்த ராணுவ நடவடிக்கையை, “வெனிசுலா மக்கள் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு நடவடிக்கை” என்று மரியா கொரினா அப்போதே பாராட்டியது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக தற்போது மரியா, “இந்த நாட்டில் ஒரு தலைவர், தன் நாட்டு குடிமக்களின் உயிரையே வெனிசுலாவின் சுதந்திரத்திற்காக பணயம் வைத்துள்ளார் என்றால், அது டிரம்ப்தான்” என தெரிவித்திருந்தார். இவையாவும் விமர்சனத்துக்குள்ளானது.


