வாஷிங்டன்,அமெரிக்காவில் நாட்டின் பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு மற்றும் வேற்று கிரக வாசிகள் தொடர்பான ரகசிய ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டிருந்த 10 முக்கிய விஞ்ஞானிகள் அடுத்தடுத்து காணாமால் போனதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் சிலர் மர்மமான முறையில் உயிரிழந்ததாகவும், அவர்களின் உயிரிழப்புக்கான காரணம் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
10 முக்கிய விஞ்ஞானிகள் மாயமானது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிடம் அதிகாரிகள் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்த டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லெவிட் கூறுகையில், “விஞ்ஞானிகள் மாயமான வழக்குகளை முழுமையாக மதிப்பாய்வு செய்வதற்கும், இந்த வழக்குகளுக்கு இடையில் உள்ள பொதுவான தொடர்புகளை கண்டறிவதற்கும், அரசின் விசாரணை முகமைகள் மற்றும் எப்.பி.ஐ. அதிகாரிகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்” என்று தெரிவித்தார்.




