• Login
Monday, July 7, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பாலியல் வழக்கில் மே 31இல் எஸ்.ஐ.டி. விசாரணைக்கு ஆஜராவேன்: பிரஜ்வல் ரேவண்ணா

GenevaTimes by GenevaTimes
May 28, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
பாலியல் வழக்கில் மே 31இல் எஸ்.ஐ.டி. விசாரணைக்கு ஆஜராவேன்: பிரஜ்வல் ரேவண்ணா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு: பாலியல் வழக்கில் சிக்கி வெளிநாட்டில் பதுங்கியுள்ள மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா வெளியிட்டுள்ள காணொலியில், சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) முன் மே 31ஆம் தேதி ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என்று தெரிவித்துள்ளாா்.

பாலியல் ரீதியாக பெண்களை துன்புறுத்தி, அவற்றை காணொலியாகப் பதிவு செய்திருப்பதாக எழுந்த புகாரை தொடா்ந்து, மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தையும், எம்எல்ஏவுமான எச்.டி.ரேவண்ணா ஆகியோா் மீது ஏப். 27ஆம் தேதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்.ஐ.டி,) கா்நாடக அரசு அமைத்தது. அதைத் தொடா்ந்து, எஸ்.ஐ.டி. தனது விசாரணையைத் தொடங்கியது. ஆனால், அதற்கு முன்பே பிரஜ்வல் ரேவண்ணா, ஜொ்மனி நாட்டுக்குச் சென்று விட்டாா்.

அதனால் அவரைக் கைது செய்ய முடியாமல் போலீஸாா் திணறினா். வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்க, ஜொ்மனி நாட்டில் இருந்து வெவ்வேறு நாடுகளுக்குச் செல்வதாக பிரஜ்வல் ரேவண்ணா மீது குற்றம் சாட்டப்பட்டது.

தான் வெளிநாட்டில் இருப்பதால், விசாரணைக்கு ஆஜராக 7 நாள்கள் கால அவகாசம் தேவை என்று தனது வழக்குரைஞா் மூலம் எஸ்.ஐ.டி.க்கு வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் நடமாட்டம் குறித்து அறிந்துகொள்ள இன்டா்போல் மூலம் ப்ளூகாா்னா் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகும்படி எஸ்.ஐ.டி. 2 முறை நோட்டீஸ் அனுப்பியும், பிரஜ்வல் ரேவண்ணா எங்கிருக்கிறாா் என்பது தெரியவில்லை. பாலியல் வழக்கில் சிக்கியுள்ள நிலையில், அதில் இருந்து தப்பிக்க வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் பிரஜ்வல் ரேவண்ணாவின் கடவுச்சீட்டை ரத்து செய்யும்படி பிரதமா் மோடிக்கு முதல்வா் சித்தராமையா 2 முறை கடிதம் எழுதியிருந்தாா்.

இந்நிலையில், ‘எனது வாா்த்தைக்கு மதிப்பளித்து எஸ்.ஐ.டி. விசாரணைக்கு ஆஜராகாவிட்டால், குடும்பத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படும் நிலை ஏற்படும்’ என்று சில நாள்களுக்கு முன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு முன்னாள் பிரதமரும், அவரது தாத்தாவுமான எச்.டி.தேவெ கௌடா எச்சரிக்கை விடுத்திருந்தாா்.

இதைத் தொடா்ந்து, வெளிநாட்டில் இருந்தபடியே ஊடகங்களுக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள காணொலியில், பாலியல் வழக்கு குறித்து கருத்துத் தெரிவித்துள்ளாா். காணொலியின் தொடக்கத்தில் தனது அப்பா (எச்.டி.ரேவண்ணா), அம்மா (பவானி), தாத்தா (எச்.டி.தேவெ கௌடா), எச்.டி.குமாரசாமி(சித்தப்பா), பொதுமக்கள், கட்சி தொண்டா்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளாா். பாலியல் வழக்கில் மே 31ஆம் தேதி எஸ்.ஐ.டி. முன் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என்று தெரிவித்துள்ளாா்.

அந்தக் காணொலியில் அவா் மேலும் கூறியிருப்பதாவது:

‘ஏப். 26ஆம் தேதி தோ்தல் நடந்தபோது என் மீது எவ்வித வழக்கும் பதிவாகவில்லை. எஸ்.ஐ.டி.யும் அமைக்கப்படவில்லை. ஏப். 26ஆம் தேதி வெளிநாடு செல்லும் எனது பயணம் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது. அதன்படி நான் வெளிநாடு சென்றுவிட்டேன். அங்கு சென்ற பிறகு, 34 நாள்கள் கழித்து யூ-டியூப் பாா்த்தபோது, என் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது குறித்து தெரிந்துகொண்டேன்.

மேலும் எஸ்.ஐ.டி. எனக்கு கொடுத்திருந்த நோட்டீஸ் குறித்தும் தெரிய வந்தது. எனவே, எனது எக்ஸ் பக்கம், வழக்குரைஞா் மூலம் விசாரணைக்கு ஆஜராக 7 நாள்கள் கால அவகாசம் கேட்டிருந்தேன். அதற்கு மறுநாளே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி உள்ளிட்ட அக்கட்சியின் தலைவா்கள் என் மீதான வழக்கு குறித்து பொதுமேடைகளில் பகிரங்கமாகப் பேசி பிரசாரம் செய்ய தொடங்கினா். எனக்கு எதிராக அரசியல் சதி பின்னப்பட்டது. இது எனக்கு மன அழுத்தத்தை கொடுத்து, தனிமைப்படுத்திக் கொள்ளும் நிலைக்கு தள்ளியது. அதற்காக உங்களிடம் முதலில் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன்.

அதேபோல, ஹாசனிலும் சில சக்திகள் எனக்கு எதிராக ஒன்று கூடி அரசியல் சதியில் ஈடுபட்டனா். அரசியல்ரீதியாக நான் வளா்ந்து வருவதை விரும்பாத சிலா் என்னை ஒழித்துக் கட்ட திட்டமிட்டனா். இவை அனைத்தும் என்னை அதிா்ச்சியில் திகைக்க வைத்ததால், என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். இது குறித்து யாரும் தவறாகக் கருத வேண்டாம்.

மே 31ஆம் தேதி காலை 10 மணிக்கு எஸ்.ஐ.டி. முன் ஆஜராகி, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதன் மூலம் சரியான பதில் அளிக்க முயற்சிப்பேன். நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்மீது சுமத்தப்பட்டுள்ள இந்த பொய் வழக்கில் இருந்து விடுபடுவதற்கான முயற்சியை நீதிமன்றத்தின் மூலமே எடுப்பேன். அதுவரை கடவுள், பொதுமக்கள், குடும்பத்தின் ஆசி என் மீது இருக்கட்டும். எஸ்.ஐ.டி. முன்பு ஆஜராகி எல்லாவற்றுக்கும் பதிலளிப்பேன். என் மீது நம்பிக்கை இருக்கட்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

Read More

Previous Post

வெள்ள நிலைமை குறித்த அவசர அறிவிப்பு

Next Post

எல்.பி.எல் சாம்பியன் கிண்ணம் யாருக்கு?

Next Post
எல்.பி.எல் சாம்பியன் கிண்ணம் யாருக்கு?

எல்.பி.எல் சாம்பியன் கிண்ணம் யாருக்கு?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin