அமெரிக்காவுடன் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்கு தெஹ்ரான் இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை என, “சம்பந்தப்பட்ட அதிகாரிகளை” மேற்கோள் காட்டி ஈரானின் அரை-அரசு செய்தி நிறுவனமான தஸ்னிம் சனிக்கிழமை செய்தி வெளியிட்டது.
‘ஈரானிய துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டிருப்பதாலும், பேச்சுவார்த்தைகளில் வோஷிங்டனின் ‘அளவுக்கு அதிகமான கோரிக்கைகளாலும்’, ‘ஈரான் இந்த நிமிடம் வரை அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்ளவில்லை’ என்று அது கூறியது.
அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க மறுக்கும் ஈரான்
பேச்சுவார்த்தைகள் தொடர்வதற்கு, அமெரிக்காவின் அதீத கோரிக்கைகளைத் தவிர்ப்பது ஒரு அடிப்படை நிபந்தனை என்று ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது; இல்லையெனில், இழுத்தடிக்கும் மற்றும் பயனற்ற பேச்சுவார்த்தைகளில் நேரத்தை வீணடிக்க ஈரான் விரும்பவில்லை.

ஈரானிய வட்டாரங்களை மேற்கோள் காட்டி, ஈரானிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் திங்களன்று இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக சிஎன்என் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டது.
வோஷிங்டனும் தெஹ்ரானும் கடந்த வார இறுதியில் பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை நடத்தின, ஆனால் ஒரு உடன்பாட்டிற்கு வர முடியவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

