மத்திய கிழக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM), பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழல் குறித்துப் புதிய காணொளி ஒன்றைப் பகிர்ந்துள்ளது.
அதில் அமெரிக்கப் படைகள் மத்திய கிழக்கில் தொடர்ந்து விழிப்புடன் இருப்பதாகவும் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணையைத் திறப்பதாக ஈரான் அறிவித்திருந்தாலும் ஈரானியத் துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் கப்பல்கள் மீதான அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை (Naval Blockade) தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என CENTCOM திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அணுசக்தி ஒப்பந்தம்
ஈரானுடனான ஒரு முழுமையான மற்றும் நிரந்தரமான அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த முற்றுகை தளர்த்தப்படாது என்று அந்த காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The U.S. naval blockade continues… pic.twitter.com/EBvglrf6FA
— U.S. Central Command (@CENTCOM) April 17, 2026
இந்தப் பணியை மேற்கொள்வதற்காக 10000 இற்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் மற்றும் ஒரு டஜனுக்கும் அதிகமான நவீன போர்க்கப்பல்கள் அப்பகுதியில் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், ஈரானியத் துறைமுகங்களுடன் தொடர்பில்லாத மற்ற நாடுகளின் வணிகக் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாகத் தடையின்றிச் செல்ல அனுமதிக்கப்படும் என்றும் ஈரானியத் தொடர்புடைய கப்பல்கள் மட்டுமே மறிக்கப்படும் என்றும் அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

