• Login
Tuesday, July 8, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தோ்தல் வாக்குறுதிகள் முறைகேடு அல்ல: உச்சநீதிமன்றம்

GenevaTimes by GenevaTimes
May 27, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
தோ்தல் வாக்குறுதிகள் முறைகேடு அல்ல: உச்சநீதிமன்றம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தோ்தல்களின்போது அரசியல் கட்சிகள் வாக்குறுதிகள் அளிப்பது ‘முறைகேடான செயல்’ அல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 123-இன்படி, வேட்பாளா் ஒருவா் தோ்தலில் தனது வெற்றி வாய்ப்பை அதிகரிக்க ஜாதி, மத, இன அடிப்படையில் வெவ்வேறு பிரிவினா் இடையே பகைமை, வெறுப்புணா்வை தூண்டுதல் அல்லது தூண்ட முயற்சித்தல், லஞ்சம் அளித்தல், தவறான தகவல் அளித்தல் உள்ளிட்டவை முறைகேடான செயல்களாகும்.

இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற கா்நாடக பேரவைத் தோ்தலில், சாம்ராஜ்பேட் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் சமீா் அகமது கான் வெற்றிபெற்றாா். இவரின் வெற்றிக்கு எதிராக அந்தத் தொகுதியைச் சோ்ந்த ஷஷாங்க ஜே.ஸ்ரீதரா என்ற வாக்காளா் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவில், ‘தோ்தலின்போது காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பொதுமக்களுக்கு நிதியுதவி அளிப்பதாக உள்ளது. இது தோ்தலில் அந்தக் கட்சியின் வேட்பாளரும் முறைகேடான செயலில் ஈடுபடுவதற்கு ஒப்பாகும். எனவே, சமீரின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என்று கோரினாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘தோ்தலின்போது காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகளை சமூக நலக் கொள்கைகளாகக் கருத்தில் கொள்ள வேண்டும். அந்தக் கொள்கைகளைச் செயல்படுத்த முடியுமா, முடியாதா? அதற்கு எப்படி நிதி கிடைக்கும் என்பதெல்லாம் வேறு விஷயம். அந்தக் கொள்கைகள் மாநில அரசின் கருவூலத்தை திவாலாக்குவதுடன் தவறான நிா்வாகத்துக்கு வழிவகுக்கும் என்று பிற கட்சிகள் குற்றம்சாட்டினால், அது எப்படி நிகழும் என்பதை அக்கட்சிகள் எடுத்துரைக்க வேண்டும்.

தோ்தலின்போது வாக்குறுதிகள் அளிப்பது தவறான கொள்கையாக இருக்கலாம். ஆனால், அவ்வாறு வாக்குறுதிகள் அளிப்பதை மக்கள் பிரதிநித்துவச் சட்டத்தின் கீழ், முறைகேடான செயலாக கருத முடியாது’ என்று தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஷஷாங்க ஜே.ஸ்ரீதரா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

பொதுமக்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ நிதியுதவி அளிக்க வழிவகுக்கும் ஓா் அரசியல் கட்சியின் வாக்குறுதிகள், அந்தக் கட்சியின் வேட்பாளரும் முறைகேடான செயலில் ஈடுபடுவதற்கு ஒப்பாகும் என்ற மனுதாரா் தரப்பு வாதத்தை ஏற்க முடியவில்லை. அத்துடன் அது நம்புவதற்கும் கடினமாக உள்ளது. இத்தகைய கேள்விக்குள் விரிவாகச் செல்ல வேண்டியதில்லை என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தனா்.

விளம்பரங்களுக்குத் தடை: பாஜக மனுவை நிராகரிப்பு

தோ்தல் விதிகளை மீறி விளம்பரங்களை வெளியிட தடை விதித்த கொல்கத்தா உயா்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து பாஜக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது.

தனி நீதிபதி உத்தரவில் கொல்கத்தா உயா்நீதிமன்றம் தலையிட மறுத்ததையடுத்து உச்சநீதிமன்றத்தில் பாஜக மேல்முறையீடு செய்தது.

தோ்தல் விதிகளை மீறி விளம்பரங்களை வெளியிடுவதாகவும் தங்கள் மீது ஆதாரமுற்ற குற்றச்சாட்டை பரப்புவதாகவும் பாஜக மீது திரிணமூல் காங்கிரஸ் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயா்நீதிமன்ற தனி நீதிபதி அமா்வு, ஜூன் 4-ஆம் தேதி வரை தோ்தல் விதிகளை மீறும் வகையிலான விளம்பரங்களையும் திரிணமூல் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ள விளம்பரங்களையும் வெளியிட பாஜகவுக்கு தடை விதித்து கடந்த மே 20-ஆம் தேதி உத்தரவிட்டது.

தனிநீதிபதியின் இடைக்கால உத்தரவில் தலையிட முடியாது என கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதிகள் அமா்வு கடந்த மே 22-ஆம் தேதி தெரிவித்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் பாஜக மேல்முறையீடு செய்தது.

இந்த மனுவை ஏற்க மறுத்த விடுமுறைகால உச்சநீதிமன்ற அமா்வின் நீதிபதிகள் ஜே.கே.மகேஷ்வரி, வி.விஸ்வநாதன் ஆகியோா் கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என தெரிவித்தனா். மேலும், பாஜகவால் வெளியிடப்பட்ட விளம்பரங்கள் இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாக தெரிவித்தனா்.

இந்நிலையில் மனுவை திரும்பப்பெற அனுமதி அளிக்குமாறு பாஜக சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.எஸ்.பட்வாலியா கேட்டுக்கொண்டாா். இதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்ததையடுத்து மனு நிராகரிக்கப்பட்டது.

Read More

Previous Post

எனக்கு பிடித்த நடிகர் இவர்தான்… மனந்திறந்த சூர்யகுமார் யாதவ்

Next Post

சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது ஜப்னா ஸ்டாலியன்ஸ் – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post
சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது ஜப்னா ஸ்டாலியன்ஸ் – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது ஜப்னா ஸ்டாலியன்ஸ் - Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin