Last Updated:
வாக்கு முறைகேடு தடுக்கும் பயோமெட்ரிக் வாக்குப்பதிவு மனுவுக்கு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
வாக்குப்பதிவில் முறைகேடுகளைத் தவிர்க்க வாக்குச்சாவடிகளில் பயோமெட்ரிக் முறையை அனுமதிக்கக் கோரிய மனு குறித்த பதிலளிக்க தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் டெல்லியைச் சேர்ந்த பாஜக நிர்வாகியும், வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய் (Ashwini Kumar Upadhyay) தாக்கல் செய்த பொது நல மனுவில், தேர்தல்களில் ஆள்மாறாட்டம், கள்ள ஓட்டு பதிவுசெய்வது உள்ளிட்ட முறைகேடுகளை தவிர்க்க வாக்காளர்களின் கைரேகை மற்றும் கண் கருவிழியை ஸ்கேன் செய்யும் நடைமுறையை அமல்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி இருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மாலா பாகிச்சி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், பயோமெட்ரிக் நடைமுறையை அமல்படுத்துவதன் மூலம் தேர்தல்களில் வாக்காளர் முறைகேடுகளை தவிர்க்க முடியும் எனவும், அடுத்தடுத்து வரும் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் இந்த நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து, மனு தொடர்பாக பதிலளிக்க தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Delhi,Delhi,Delhi
வாக்குச்சாவடிகளில் பயோமெட்ரிக் முறை.. தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!


