Last Updated:
‘அலைபாயுதே’ படத்தில் ‘செப்டம்பர் மாதம்’, ‘சந்திரமுகி’ படத்தில் கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
இசை பேரரசி ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
80 ஆண்டுகளுக்கும் மேலாக தனது குரலால் இந்திய சினிமாவை வசப்படுத்தியவர் பாடகி ஆஷா போஸ்லே. 92 வயதான இவர், பல்வேறு இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி பல்வேறு ஜானர்களில் பாடி கவனம் பெற்றவர் ஆஷா போஸ்லே. 2 தேசிய விருதுகள், தாதா சாகேப் பால்கே, பத்ம விபூஷண் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்றவர் ஆஷா போஸ்லே.
இசை வரலாற்றில் அதிக பாடல்களை பாடியவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார் ஆஷா போஸ்லே. ஹேராம் படத்தில் இடம்பெற்ற ‘நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி’, ‘அலைபாயுதே’ படத்தில் ‘செப்டம்பர் மாதம்’, ‘சந்திரமுகி’ படத்தில் கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
இந்நிலையில் மாரடைப்பு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்த பாடகி ஆஷா போஸ்லே இன்று காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Deeply saddened by the passing of Asha Bhosle Ji, one of the most iconic and versatile voices India has ever known. Her extraordinary musical journey, spanning decades, enriched our cultural heritage and touched countless hearts across the world. Be it her soulful melodies or… pic.twitter.com/SbFrzf1Meu
— Narendra Modi (@narendramodi) April 12, 2026
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ஆஷா போஸ்லே மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். இந்தியாவின் மிகச் சிறந்த மற்றும் பன்முகத்தன்மை கொண்ட பாடகிகளில் அவர் ஒருவர். அவரது இசைப் பயணம் நம் கலாச்சார பாரம்பரியத்தை வளப்படுத்தியது. அவரது ஆன்மாவைத் தொடும் மெல்லிசைகளும், துள்ளலான பாடல்களும் காலத்தைக் கடந்து வாழும். அவருடன் நான் பழகிய தருணங்களை என்றும் நினைவில் கொள்வேன் என்று கூறியுள்ளார்.
The passing of Asha Bhosle Ji has created a huge void in the world of music. Her legendary career as an iconic singer has defined an era of music in India. I have fond memories of having interacted with her personally. She led her life on her own terms as an artist and as an…
— President of India (@rashtrapatibhvn) April 12, 2026
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ஆஷா போஸ்லேவின் மறைவு இசை உலகில் ஒரு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஒரு கலைஞராகவும், தனிமனிதராகவும் தனது சொந்த விதிகளின்படி வாழ்ந்தவர். அவரது காலமற்ற குரல் இந்திய இசையைத் தசாப்தங்களாக அலங்கரித்தது என்று தெரிவித்துள்ளார்.


