முன்னதாக, நேற்றைய தினம் இரவு கூட (இந்திய நேரப்படி) இந்த அமைதி பேச்சுவார்த்தையின் முதன்மை நோக்கம் ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுப்பதே என்று டிரம்ப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த உடன்பாடு எட்டப்படாததே இந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைய காரணம் என சொல்லப்படுகிறது. இதை முன்கூட்டியே கணித்தது போல நேற்று பேசிய டிரம்ப், “பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அமெரிக்காவைப் பொறுத்தவரை நாங்கள் ஏற்கனவே ராணுவ ரீதியாக வெற்றி பெற்றுவிட்டோம்” என கூறியிருந்தார். அவர் சொன்னது போலவே பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


